என்னைய விட்டுட்டு போகாத... கையைப் பிடித்து கெஞ்சிய கங்காருக் குட்டி!
மெல்போர்ன்: குழந்தைகள்தான் தங்களது அப்பாவோ அல்லது அம்மாவோ அவர்களை விட்டு மெல்ல நகர்ந்தால் கூட விடாமல் காலைப் பிடித்துக் கொண்டு போகாதப்பா என்று அழுது கத்தும் என்பார்கள். ஆனால் இங்கே பாருங்கள் ஒரு கங்காருக் குட்டியை.
பார்ப்பவர்களின் மனதைக் கரைத்துப் போடும் அளவுக்கு இருக்கிறது இந்தக் காட்சி. இந்தக் குட்டி கங்காரு, தனது பராமரிப்பாளரை போக விடாமல் அவரது கையைப் பிடித்துக் கெஞ்சுகிறது. அவர் மீது தொற்றி ஏறுகிறது.
அவரைப் போக விடாமல் தடுத்து பரிதாபப் பார்வை பார்க்கிறது. அவரும் தனது குழந்தையிடம் பேசுவது போல மறுபடியும் வருவேன், கவலைப்படாதே என்று ஆறுதல் கூறிப் பார்க்கிறார். பின்னர் அவர் போகும்போது அவரது பின்னாடியே ஓடுகிறது இந்த கங்காருக் குட்டி.
அன்புக்கு மொழி உண்டோ.. இனம் உண்டோ.. பாஷைகளற்ற பவித்திரமான உணர்வு அது என்பதை இந்த கங்காருக் குட்டி நிரூபிக்கிறது பாருங்கள்!












Click it and Unblock the Notifications