போஸ்னிய படுகொலை நினைவு தினம்: செர்பிய பிரதமர் மீது மக்கள் கல்வீச்சு
ஸ்ரெப்ரெனிகா: 1995ம் ஆண்டு ஸ்ரெப்ரெனிகா நகரில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டதன் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செர்பிய பிரதமர் அலெக்டாண்டர் வுசிக் மீது மக்கள் கற்களை வீசியதால் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
போஸ்னிய போரின்போது 1995ம் ஆண்டு ஜுலை மாதம் போஸ்னியா-ஹெர்சிகோவ்னியாவில் உள்ள ஸ்ரெப்ரெனிகா நகரில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் செர்பிய வீரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நடந்த பயங்கர படுகொலை இது தான் என்று கூறப்படுகிறது.

இந்த படுகொலை சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் செர்பிய பிரதமர் அலெக்சாண்டர் வுசிக் ஸ்ரெப்ரெனிகா நகரில் உள்ள நினைவிடத்திற்கு சென்று படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் அல்லாஹு அக்பர் என்று கூறி அலெக்சாண்டர் மீது கற்களை வீசினர். இதையடுத்து அவர் தனது பாதுகாவலர்களின் உதவியோடு அங்கிருந்து சென்றுவிட்டார். மக்கள் வீசிய கற்களில் ஒன்று அலெக்சாண்டரின் தலையில் பட்டு அவரது மூக்கு கண்ணாடி உடைந்தது.
1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை நடந்த போஸ்னிய போரில் 1 லட்சம் மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications