இந்தியா- பாக். யுத்தம் வரும்னு சொல்லவே இல்லையே.. பல்டி அடித்த பாக். பிரதமர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், காஷ்மீர் பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே 4-வது போர் எந்த நேரத்திலும் மூளலாம்'' என கூறியதாக பாகிஸ்தானின் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இது இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் பதிலடி கொடுத்திருந்தார். என் வாழ்நாளில் பாகிஸ்தான் ஒருபோதும் வெல்லவே முடியாது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாம் கூறியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதலாக உள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சு வார்த்தைமூலம் அமைதி தீர்வு காணவேண்டும் என்பதுதான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கருத்து.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் என்ற வார்த்தைகளை பிரதமர் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. இது தொடர்பான செய்தி, அடிப்படையற்றது. தவறானது. தீய நோக்கம் கொண்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications