அமெரிக்கா... மூவரை காப்பாற்ற ஆற்றில் குதித்த இந்தியர் உயிரிழப்பு.. குவியும் பாராட்டு!!

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் கிங்க்ஸ் ஆற்றில் குதித்து மூன்று குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த 29 வயது சீக்கியர் மஞ்ஜித் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆற்றில் விழுந்த குழந்தைகளில் மூவரில் இருவர் தப்பினர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஓடும் கிங்ஸ் ஆற்றின் கரையில் 8 வயதிலான இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மூவரும் ஆற்று நீரால் இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கு நின்று கொண்டிருந்த மஞ்ஜித் கொஞ்சமும் யோசிக்காமல் ஆற்று நீரில் குதித்தார். இவர் குதிப்பதைப் பார்த்து அங்கு இருந்த மற்றவர்களும் ஆற்று நீரில் குதித்து இரண்டு குழந்தைகளை காப்பாற்றினர். ஒரு பெண் குழந்தை நீருக்கு அடியில் சிக்கி 15 நிமிடங்கள் கழித்து மீட்கப்பட்டது.

Sikh Man Manjeet Singh jumped into kings river to save 3 children died

இந்த நிலையில் மஞ்ஜித் நிலை என்னவானது என்று தெரியவில்லை. 40 நிமிடங்களுக்குப் பின்னர் நீருக்குள் இருந்து வெளியே மீட்புப் படையினரால் கொண்டு வரப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வந்த மஞ்ஜித் டிரக் வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்தார். பிரான்சோ என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் டிரக் பயிற்சி பள்ளியும் துவக்கினார். பயிற்சி முடித்த பின்னர் ஜெட் ஸ்கை செய்வதற்காக கிங்க்ஸ் ஆற்றுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது உயிரை துச்சமென நினைத்து மற்றவர்களை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த மஞ்ஜித்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+