எம்.பி. பதவியிழந்த 'பலான' பெர்லுஸ்கோனி.... ஆட்டம் குளோஸ்!
ரோம்: வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கு விசாரணையில் சில்வியோ பெர்லுஸ்கோனி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் எம்.பி., பதவியை இழந்துள்ளார்
இத்தாலி நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்து-அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறந்த வர் சில்வியோ பெர்லுஸ்கோனி வயது 77.
அரசியலில் மட்டுமன்றி மீடியாசெட் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். டிவி, பத்திரிகை, நிதி, வங்கி, விளையாட்டு, சினிமா உள்பட பல துறைகளில் இவர் கோடிக்கணக்கில் நிதி முதலீடு செய்துள்ளார்.

செக்ஸ் புகார்
2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 18 வயதுக்குட்பட்ட கரீமா என்ற சிறுமியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும், அதற்காக அவர் ஏராளமான பணம் செலவிட்டதாகவும் பரபரப்பாக புகார் எழுந்தது. இத்தாலியில் கடும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. இதையடுத்து இவர் பதவி விலகினார்.

வழக்கு விசாரணை
மாபியாக்களுடன் தொடர்பு, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வரி ஏய்ப்பு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பெர்லுஸ்கோனி மீது சுமத்தப்பட்டன. இவற்றிர்காக தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இவரது வலதுசாரிக் கட்சியின் கூட்டணியுடன்தான் தற்போதைய பிரதமர் என்ரிகோ லெட்டா ஆட்சியில் உள்ளார்.

வரி ஏய்ப்பு
வரி ஏய்ப்பு வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி, பெர்லுஸ்கோனிக்கு கோர்ட் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. எனினும், சட்ட விதிமுறைகளின்படி இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ஓராண்டாக குறைக்கப்பட்டது. பெர்லுஸ்கோனி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் நிலை உருவானது.

அரசுக்கு நெருக்கடி
எம்.பி பதவியை இழந்தால் தன்னுடைய கட்சியின் சார்பாக ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்று தனது ஆதரவு எம்.பி.க்களை பெர்லுஸ்கோனி வற்புறுத்தினார்.

கை கழுவிய ஆதரவாளர்கள்
ஆனால், அரசியலில் அவரது விசுவாசமான வலதுகரமாகவும், தற்போதைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருக்கும் ஏஞ்சலினோ அல்பானோ இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

நிறைவேறிய தீர்மானம்
இந்நிலையில்,சில்வியோ பெர்லுஸ்கோனியை எம்.பி. பதவியை விட்டு நீக்குவது தொடர்பான தீர்மானம் புதன்கிழமையன்று இத்தாலி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட விவாதம் மற்றும் எம்.பி.க்களுக்குள் கைகலப்பு போன்றவற்றிர்கிடையே பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது.

தேர்தலில் போட்டியிட தடை
இதனையடுத்து,சில்வியோ பெர்லுஸ்கோனியை எம்.பி. பதவியை விட்டு நீக்கியுள்ளதாக சபாநாயகர் பியெட்ரோ க்ராஸோ அறிவித்தார்.பாராளுமன்றத்தால் இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

முடிந்த சகாப்தம்
3 முறை இத்தாலியின் பிரதமராக பதவி வகித்து-அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறந்த சில்வியோ பெர்லுஸ்கோனியின் சகாப்தம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications