பூமியைத் தாக்கும் சூரியப் புயல்... செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து?
சூரியப் புயல் இன்று பூமியைத் தாக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
நியூயார்க்: சூரியப் புயல் இன்று பூமியைக் கடுமையாக தாக்கும் அபாயம் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரியப் புயல் என்பது சூரிய கிளரொளியில் (Solar Flare) இருந்து ஆரம்பிக்கும். சூரிய கிளரொளி என்பது சூரியனில் ஏற்படும் மிகப்பெரிய வெடிப்பாகும்.

இத்தகைய பெரிய வெடிப்பின் காரணமாக சூரியனின் மேற்பரப்பில் இரண்டு மிகப்பெரிய தீப்பிழம்புகள் உருவாகியுள்ளதாகவும், அது வழக்கத்தைவிட அதிக திறனுடன் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஒரு 'G1' புயல் கடிகாரத்தை வெளியிட்டு உள்ளது.
இந்த சூரியப் புயலின் தாக்கமானது, பூமியின் காந்த விசையுடன் மோதி கரும் புயலாகவும் என நாசா தெரிவித்துள்ளது. இதனால் பூமியின் இயற்கைத்தன்மை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதோடு, சூரியப் புயலால் அதிகம் பாதிக்கப்படுவது நமது தொழில்நுட்பங்கள் தான். அதன்படி, இந்த சூரியப்புயலால், தற்போது பூமியைச் சுற்றி வரும் நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
மேலும், விமானங்களின் 'ஜி.பி.எஸ்.’ சிஸ்டமும், பூமியில் சில இடங்களில் மின் வினியோகத்திலும் இந்த சூரியப்புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய சூரியப் புயலானது ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் பகுதிகளையும், மிச்சிகன் மற்றும் முக்கிய பகுதிகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளையும் பாதிக்கும் என நாசா அறிக்கை கூறுகிறது.
இதுவரை அளக்கப்பட்ட சூரிய கிளரொளிகளிலேயே மிகவும் பலமானது எக்ஸ்-28 சூரிய கிளரொளிதான் என்பதும், அது கடந்த 2003-ஆம் ஆண்டு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications