ராணுவத்தினரைக் கொன்று அவர்களது ரத்தத்தை மக்களிடம் குடிக்கச் சொல்லும் தெற்கு சூடான் தீவிரவாதிகள்
ஜுமா: தெற்கு சூடான் நாட்டில் புரட்சிப்படையினர் ராணுவத்தினரை கொன்று அவர்களுடைய ரத்தத்தை அப்பாவி பொது மக்களை குடிக்க வைத்துள்ள கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சூடானில் ராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையே கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. உலகின் மிக இளைய நாடான தெற்கு சூடானில், புரட்சிப்படையின் தலைவர் ரீக் மச்சார் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக, கூறி அதிபர் சால்வா கீர் குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மூண்ட உள்நாட்டுச் போரின் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சுமார் 20 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். பாதுகாப்பு முகாம்களில் 45,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அரசுக்கும், புரட்சிபடைக்கும் இடையே, அமைதியை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆப்பிரிக்க யூனியன் சார்பில் அங்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன் அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புரட்சிப்படையினரும், ராணுவ படையினரும் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினருமே பெண்களை கடத்தி கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் தங்கள் எதிரிகளை கொன்று அவர்களுடைய ரத்தத்தை பொதுமக்களை வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளனர். மேலும் கொல்லப்பட்டவர்களை எறியும் தீயில் சுட்டு அவர்களுடைய இறைச்சியை மக்களை கட்டாயப்படுத்தி சாப்பிட செய்துள்ளனர். இது போன்று மிக கொடூரமாக நடந்து கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications