ராணுவத்தினரைக் கொன்று அவர்களது ரத்தத்தை மக்களிடம் குடிக்கச் சொல்லும் தெற்கு சூடான் தீவிரவாதிகள்
ஜுமா: தெற்கு சூடான் நாட்டில் புரட்சிப்படையினர் ராணுவத்தினரை கொன்று அவர்களுடைய ரத்தத்தை அப்பாவி பொது மக்களை குடிக்க வைத்துள்ள கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சூடானில் ராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையே கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. உலகின் மிக இளைய நாடான தெற்கு சூடானில், புரட்சிப்படையின் தலைவர் ரீக் மச்சார் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக, கூறி அதிபர் சால்வா கீர் குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மூண்ட உள்நாட்டுச் போரின் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சுமார் 20 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். பாதுகாப்பு முகாம்களில் 45,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அரசுக்கும், புரட்சிபடைக்கும் இடையே, அமைதியை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆப்பிரிக்க யூனியன் சார்பில் அங்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன் அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புரட்சிப்படையினரும், ராணுவ படையினரும் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினருமே பெண்களை கடத்தி கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் தங்கள் எதிரிகளை கொன்று அவர்களுடைய ரத்தத்தை பொதுமக்களை வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளனர். மேலும் கொல்லப்பட்டவர்களை எறியும் தீயில் சுட்டு அவர்களுடைய இறைச்சியை மக்களை கட்டாயப்படுத்தி சாப்பிட செய்துள்ளனர். இது போன்று மிக கொடூரமாக நடந்து கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications