தெற்கு சூடானில் கடும் உணவுப் பஞ்சம்: 39 லட்சம் மக்கள் பாதிப்பு
ஜூபோ: தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுமார் 39 லட்சம் மக்கள் பசியில் வாடி வருவதாகத் தெரிவித்துள்ள ஐநா அதிகாரிகள், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளதாக கூறியுள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவானது தெற்கு சூடான். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துணை அதிபர் ரேக் மாச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. வன்முறையில் 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
தெற்கு சூடான் நாட்டில் சுமார் 80 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 39 லட்சம் மக்கள் பசியில் வாடி வருவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளதாக கூறியுள்ளனர்.
இதனால், சர்வதேச நாடுகள் தெற்கு சூடானுக்கு அறிவித்த நிதி ஒதுக்கீட்டை துரிதமாக வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சூடானில் இருந்து பிரிந்து 3 வருடமே ஆகிறது. ஆகவே எண்ணெய் வளம் மிக்க நாடான தெற்கு சூடான், அதன் வளர்ச்சியை மேம்படுத்த முயலாமல் இருக்கிறது. அங்கு நிகழும் வன்முறையால் நாட்டின்பொருளாதாரம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு சூடானின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஆட்சி அமையாததே மக்களின் இந்த பரிதாப நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications