பாகிஸ்தானில் பெரிய மாநாடு நடத்திய உலகின் முக்கிய உளவு அமைப்புகள்.. என்ன காரணம்?
உலகில் சில முக்கிய நாடுகளின் உளவு அமைப்பின் இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து, கூட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
Recommended Video

இஸ்லாமாபாத்: உலகில் சில முக்கிய நாடுகளின் உளவு அமைப்பின் இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து, கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆசிய கண்டத்தில் இது மிக முக்கியமான கூட்டமாக பார்க்கப்படுகிறது.
உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்காக மற்ற நாடுகளில் உளவாளிகளை வைத்து இருக்கிறார்கள். அதேபோல் தீவிரவாத இயக்கங்களிலும் கூட உளவாளிகளை நுழையவிட்டு, முக்கியமான தகவல்களை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் உலகின் முக்கியமான, சில உளவு குழுக்களின் தலைவர், ஒன்றாக சேர்ந்து கூட்டம் நடத்தினால் எப்படி இருக்கும்? அதுவும் பாகிஸ்தானில் நடந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் ஒரு கூட்டம், நேற்று நடந்து இருக்கிறது.

எந்தெந்த நாடுகள்
இந்த கூட்டத்தில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், ஆகிய நாடுகள் கலந்து கொண்டு இருக்கிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிற்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அமெரிக்கா மட்டுமே. ஆம், அமெரிக்காவிற்கு எதோ ஒரு வகையில் இந்த நாடுகள் எல்லாம் எதிரான நிலைப்பாடுகள் எடுத்துள்ளது. இப்போதுதான் சில நாட்கள் முன்பு அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் பிரச்சனை பெரிதானது.

கூட்டியது யார்
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியது பாகிஸ்தான். ஆம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அதேபோல், அதே அமைப்புதான், பல்வேறு நாடுகளில் இருந்து, சரியாக முழு பாதுகாப்புடன் உளவு இயக்க இயக்குனர்கள், தலைவர்கள் பாகிஸ்தானிற்கு கொண்டு வந்தது.

பிரச்சனை என்ன
இதில் மிகவும் முக்கியமான விஷயம் இரண்டு பேசப்பட்டுள்ளது. 1. அமெரிக்கா இந்த நான்கு நாடுகளின் அரசியலில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. அதைபற்றி இதில் விவாதித்து இருக்கிறார்கள். 2.ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சி குறித்து பேசியுள்ளனர்.

பெரிய திருப்பம்
ஆப்கானிஸ்தானில் தற்போது, ஐஎஸ் அமைப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. அதவாது ஆப்கானிஸ்தானில் சில முக்கிய இடங்களை ஆக்கிரமித்து அதை தனி நாடாக, தனி மாகாணமாக அறிவிக்கும் எண்ணத்தில் அந்த தீவிரவாத இயக்கம் இருக்கிறது. இதை தடுக்கவும் இதில் சில முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications