போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இலங்கை கடும் எதிர்ப்பு!
ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மானத்துக்கு இலங்கை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தை ஒட்டி அமெரிக்கா நடத்திய அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க கூறியதாவது:

அமெரிக்கா தயாரித்திருக்கும் வரைவு தீர்மானமானது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மறுசீரமைப்புச் செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவிக்கவில்லை.
ஏற்கனவே கூறிய விவகாரங்களைத்தான் மீண்டும் மீண்டும் கூறுகிறது. அத்துடன் எங்கள் மீது ஒரு தீர்ப்பை திணிக்கும் வகையிலும், பரிந்துரைக்கிறது.
இந்த தீர்மானத்தின் பல பத்திகள் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கிறது.
இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை குற்றவியல் விசாரணை அல்ல, மனித உரிமை விசாரணை என்றும் கூறப்பட்டாலும், குற்றவியல் நீதி அம்சங்களை முன்வைப்பது ஏற்புடையது அல்ல.
ஜனவரி மாதம் 8ஆம் நாள் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை பின்பற்றிவரும் புதிய அணுகுமுறையின் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.
எமது அரசாங்கம் சகல மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சுயவிருப்பத்தின் பேரில் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இவ்வாறு ரவிநாத ஆரியசிங்க கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications