நாய்குட்டி உடலில் வெடிகுண்டை கட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் - அதிர்ச்சி வீடியோ
மோசூல்: ஈராக்கில் நாய் குட்டியின் உடலில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் கட்டிவிட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈராக்கின் மோசூல் நகரை கைப்பற்ற ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், ஈராக் ராணுவம் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் இடையே கடுமையாக சண்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகளுடன் நடைபெறும் சண்டையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நாய் குட்டியின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி சதிசெயலில் ஈடுபடுவது தற்போது தெரியவந்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்க்கும் ஈராக் நாட்டை சேர்ந்த 3 பேர் ஒரு சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஒரு நாய் குட்டியின் உடலில் மூன்று சிறிய பிளாஸ்டிக் பாட்டில்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் சிறிய அளவிலான வெடிகுண்டுகள் இருக்கிறது என அவர்கள் கூறுவது போல் அந்த வீடியோவில் உள்ளது.
இந்த வெடிகுண்டை ரிமோட் மூலம் வெடிக்க வைக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இதனை கண்டறிந்த அவர்கள் அந்த வீடியோவை செயல் இழக்க செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இந்த வெடிகுண்டை பயன்படுத்தி 4 பேர் கொல பயன்படுத்தி 4 பேர் வரை கொல்லவும் அல்லது படுகாயம் அடைய வைக்கவும் முடியும் அவர்கள் விளக்குகின்றனர்.












Click it and Unblock the Notifications