சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 அலகுகளாக பதிவு!
Subscribe to Oneindia Tamil

சாண்டியோகாவில் உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சாண்டியாகோவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
உலகில் நிலநடுக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படும் நாடாக சிலி உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட 8.8 அளவுள்ள நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்தன.
இந்நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சிலி எதிர்கொண்டிருக்கிறது. இருப்பினும் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் பற்றிய தகவல்கள் வெளியாவில்லை.












Click it and Unblock the Notifications