ஓமனில் தற்கொலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால்...
துபாய்: ஓமனில் தற்கொலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
2013ம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்த இந்தியர்களில் மாதாமாதம் குறைந்தது 5 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த எண்ணிக்கை 2014ம் ஆண்டு குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் மாதம் 3 இந்தியர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை
2013ம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்த இந்தியர்களில் 54 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 34 ஆக குறைந்தது. முன்னதாக 2012ம் ஆண்டில் 63 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதலில் தெரிவித்துள்ளது.

ஓமன்
2014ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி வரை ஓமனில் 603,473 இந்தியர்கள் பணியாற்றியுள்ளனர். இதுவே கடந்த 2013ம் ஆண்டில் ஓமனில் 5 லட்சத்து 99 ஆயிரத்து 473 இந்தியர்கள் வேலை பார்த்துள்ளனர்.

இந்தியர்கள்
ஓமனில் தற்கொலை செய்து கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் இன்னும் இந்தியர்கள் தற்கொலை செய்யத் தான் செய்கிறார்கள். அவர்கள் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்று இந்திய தூதரக வழக்கறிஞர் தீபா சுதிர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில்
2012ம் ஆண்டில் உலக அளவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் அதிகமானோர் இந்தியர்கள் என்று 2014ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்ப்லைன்
ஓமனில் வசிக்கும் இந்தியர்களின் குறைகளை தீர்க்க அங்குள்ள இந்திய தூதரகம் 24 மணிநேரம் செயல்படும் ஹெல்ப்லைன் மற்றும் டோல் ப்ரீ ஹெல்ப்லைன் அமைத்துள்ளது. இந்த அழைப்புகளை தூதரகத்தில் உள்ள சமூக நல ஊழியர்கள் கவனித்து வருகிறார்கள். அவசர அழைப்புகளை மூத்த அதிகாரிகள் கவனிக்கிறார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications