ரூ. 12,170 கோடி கொடுத்து சகாரா நிறுவன ஹோட்டல்களை வாங்குகிறார் புருனே சுல்தான்
நியூயார்க்: முதலீட்டாளர்களின் ரூ. 20 ஆயிரம் கோடியை ஏமாற்றியதற்காக சிறையில் இருக்கும் சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயின் சொத்துக்களை வாங்க புருனே சுல்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களிடம் திரட்டிய ரூ. 20 ஆயிரம் கோடி ரூபாயைத் திரும்பத் தரத் தவறியதாக சஹாரா குழுமத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் கோரி சுப்ரதா ராய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ரூ. 10 ஆயிரம் கோடி ரூபாயை ஜாமீன் தொகையாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சிறையிலிருந்த படியே, வெளிநாடுகளில் உள்ள தனது சொத்துக்களை விற்க சுப்ரதா ராய் முயற்சி செய்து வருகிறார்.

பேச்சுவார்த்தை...
அதன்படி, லண்டனில் உள்ள க்ராஸ்வெனர் ஹவுஸ் ஓட்டல், நியூயார்க்கில் உள்ள பிளாசா ஓட்டல் மற்றும் ட்ரீம் ஓட்டலை விற்பது தொடர்பாக ராய் பலரிடம் பேச்சுவார்தை நடத்திவருகிறார்.

புருனே சுல்தான் விருப்பம்...
இந்நிலையில், ராயின் இந்த சொத்துக்களை வாங்குவதற்கு புருனே சுல்தான் ஹஸ்ஸனால் பொல்கையாஹ் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான விலையையும் அவரே நிர்ணயத்துள்ளதாகவும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் ஒப்பந்தம்...
புருனே சுல்தானுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்த 3 ஓட்டல்களையும் 2 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் இரு தரப்புக்கும் இடையேயான ஒப்பந்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 13 ஆயிரம் கோடி ரூபாய்...
2 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பின் படி, 12 ஆயிரத்து 170 கோடி ரூபாய் ஆகும்.

தனி அறை...
சொத்துக்களை விற்பது தொடர்பான ஆலோசனைக்கென ராய்க்கு சிறையில் தனி அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனபோதும், அவரது நடவடிக்கைகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications