ஒபாமாவின் டுவிட்டர் , பேஸ்புக் இணைப்புகளை முடக்கிய சிரியா அதிபரின் ஆதரவாளர்கள்
வாஷிங்டன்: நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களை சில மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர் சிரிய அதிபர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள். இதனால், இந்த பக்கங்களை பார்வையிடுவதற்காக இணைப்புகளை கிளிக் செய்த நபர்கள், சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணைய இணைப்புக்கு திசை திருப்பப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் பரிதாபமாக பலியானார்கள். இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, சிரியா மீது போர் தொடுக்க இருப்பதாக அறிவித்தது. பின்னர் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் சமரசப் பேச்சால் போர் முடிவை மாற்றிக் கொண்டது அமெரிக்கா.

முடக்கம்....
இந்நிலையில் நேற்று சில மணி நேரங்கள் அதிபர் ஒபாமாவின் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களை முடக்கப்பட்டது.

சிரிய மின்னணு ராணுவம்...
அச்சமயத்தில் ஒபாமாவின் சமூக வலைத் தளப் பக்கங்களுக்குச் சென்ற நபர்கள், அவர்கள் சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணையதளத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நன்றி....
அதில், 'உங்கள் நுழைகைக்கு நன்றி! ஒபாமாவின் அபாயகரமான பிரச்சார இணைப்புகளை நாங்கள் முடக்கியுள்ளோம்' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உண்மைதான்...
சில மணி நேரங்களுக்கு இந்த இணைப்புகள் முடக்கப்பட்டது உண்மைதான் என வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

புனரமைப்பு பணிகள்...
விஷமிகள் சிலர் அதிபரின் இணைப்புகளை முடக்கியுள்ளனர். எனினும், இவற்றை நிர்வகிக்கும் கட்டுப்பாடு அவர்களின் கைகளுக்கு போகவில்லை. முடக்கப்பட்ட இணைப்புகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதற்கு முன்னர்...
அமெரிக்காவின் பிரபல நாளிதழ்களான நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கடற்படை வீரர்கள் தேர்வு மையம் ஆகியவற்றின் இணையதளங்களையும் இவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் முடக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications