தாலிபான் தலைவர் முல்லா ஓமர் மரணம்.. புதிய தலைவராக முல்லா அக்தர் தேர்வு
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் தலைவர் முல்லா ஓமர் மரணமடைந்துள்ளதை ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, தாலிபான்களின் புதிய தலைவராக முல்லா அக்தர் முஹமது மன்சூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முல்லா ஓமர் 2013ம் ஆண்டு, பாகிஸ்தானின் கராச்சி நகர ஆஸ்பத்திரியில் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தற்போது தெரிவித்துள்ளது. ஆங்கில செய்தி ஊடகம் இதுகுறித்து நேற்று செய்தி வெளியிட்டதை தொடர்ந்து ஆப்கன் அரசு விசாரணை நடத்தி அத்தகவலை உறுதி செய்துள்ளது.

எனவே, இதுவரை முல்லா ஓமர் மரணம் பற்றிய தகவல்களை மறைத்து வந்த தாலிபான்கள் தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளனர். தங்கள் புதிய தலைவராக முல்லா அக்தர் முஹமது மன்சூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
முல்லா ஓமர் போன்ற புகழ் அக்தருக்கு கிடையாது என்றபோதிலும், அடுத்த தலைமைக்கு வேறு யாரும் பொருந்தவில்லை என்பதால் அக்தர் அந்த இடத்துக்கு வந்துள்ளார். ஆப்கன் அரசுடனான தாலிபான்களின் அமைதி பேச்சுவார்த்தை குழுவில் அக்தர் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications