Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கடைசி தமிழன் இருக்கும் வரை.." இலங்கை நாடாளுமன்றத்தை அதிர வைத்த அர்ச்சுனா.. ஆவேச பேச்சு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தாலும் கூட இன்னுமே அங்குள்ள தமிழர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தே வருகிறார்கள். இதற்கிடையே அங்குத் தமிழர்கள் படும் கஷ்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் ராமநாதன் அர்ச்சுனா பேசியுள்ளார். ஆளும் இலங்கை அரசை மிகக் கடுமையாக விமர்சித்த அவர் கடைசி தமிழன் இருக்கும் வரை மீண்டும் என்பிபி கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஆவேசமாகப் பேசினார்.

நமது அண்டை நாடான இலங்கையில் வாழும் தமிழர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். உள்நாட்டுப் போர் முடிந்தாலும் கூட இன்னுமே அவர்களின் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. விலைவாசி உயர்வு, பொருளாதார பாதிப்பால் இலங்கை தடுமாறும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் கூடுதல் இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

Sri lanka world

ராமநாதன் அர்ச்சுனா

இதற்கிடையே அங்குத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா ஆவேசமாகப் பேசியுள்ளார். அங்கு ஆளும் அரசு எப்படி அடிப்படை வாத கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது என்பது குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. முஸ்லீம் சமூகத்தினரையும் இலங்கை அரசு ஒடுக்குவதாகச் சொன்ன அவர், அதை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்தீர்கள்

இது தொடர்பாக அவர் பேசுகையில், "தமிழ் மக்களிடம் பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்கள் தான் இந்த அநுரகுமார அரசு. எங்கள் மக்களும் இவர்கள் சொல்லும் பொய்களை உண்மை என்று நம்பி ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் இன்று நடப்பதைப் பார்த்தால் ஏற்க முடியவில்லை.. எங்களுடைய சமூகம் செய்த வரலாற்றுத் தவறு இந்த என்பிபி அரசுக்கு வாக்களித்தது தான். உங்களுக்குப் போடப்பட்ட ஒவ்வொரு வாக்கையும் நினைத்தால் எனக்கு நெஞ்செல்லாம் எரிகிறது.

ஈஸ்டர் அட்டாக்கை தொடர்ந்து முஸ்லீம் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு என் தனி ஒரு கலாச்சாரம் இருக்கிறது பிழையா? அவர்களுக்கு என்று ஒரு வரலாறு ஒன்று இருக்கிறது பிழையா? காலம் காலமாகத் தமிழனையும் முஸ்லிமையும் நீங்க என்ன செய்கிறீர்கள்.. போட்டு அடி அடி என்று அடிக்கிறீர்கள்.

பிள்ளையார் சிலை

திருக்கோணமலையில் போய் புத்தர் விகாரத்தை வைக்கிறீர்கள்.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்.. இல்ல தெரியாமல் தான் கேட்கிறேன்.. இங்கு நான் பிள்ளையார் சிலையை வைத்தால் என்ன செய்வீர்கள். சும்மா இருப்பீர்களா? என்னை அடித்துக் கொல்வீர்கள். ஏனென்றால் உங்கள் மனசில் வெறி இருக்கிறது.. இன வெறி இருக்கிறது.

கடைசி தமிழன் இருக்கும் வரை

நாளை இந்த நாடாளுமன்றம் முன்பு, நான் புத்தர் சிலையை எடுத்துவிட்டு ஒரு பிள்ளையார் சிலையை வைக்கிறேன். நீங்கள் வைக்க விடுவீர்களா? திரும்பத் தீரும் அடிப்பீர்கள். நாங்களும் பார்க்கிறோம். பொறுத்துப் பொறுத்து பார்க்கிறோம். ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. கடைசி தமிழன் இருக்கும் வரைக்கும் வடக்கு மாகாணத்தில் ஒரு ஓட்டும் உங்களுக்கு விழாது. உங்களைப் பார்த்தாலே வெட்கமாக இருக்கிறது. நான் தமிழ் பால் குடித்து வளர்ந்தவன்.. ஆனால் முஸ்லிம் என்னுடைய ரத்தம்.. நீங்கள் என்ன சொன்னாலும்.. என்ன செய்தாலும் ஒவ்வொரு முஸ்லீம் மக்களுக்காகவும் நான் நிற்பேன்" என்றார்.

அவரது இந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. அடிப்படையில் ஒரு மருத்துவரான ராமநாதன் அர்ச்சுனா, இலங்கையில் நடந்த ஒரு சுகாதார முறைகேட்டை அம்பலப்படுத்தியதன் மூலம் கவனம் பெற்றவர். அதன் பிறகு அரசியலில் குதித்த அவர், 2024ல் இலங்கை எம்பியாக தேர்வானார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+