அடிப்பது நீ.. பெயர் எனக்கு..உலகையே சிதற விடும் ஐஎஸ்.. திகிலடிக்கும் தாக்குதல்கள்!
பாரிஸ்: உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு சிரியாவை முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்துதான் உலகம் முழுவதும் தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு ஊக்கமும், தைரியமும், உத்வேகமும் போய்ச் சேருகிறது. உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் அதன் விசுவாசிகள் தங்களது பகுதிகளில் தாக்குதலை நடத்தி உலகையே நடுங்க வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹாலன்டே கூறுகையில்,தீவிரவாதத் தாக்குதல்களைக் கண்டு பயந்து விடப் போவதில்லை என்றும் மேலும் தீவிரமாக தனது நாட்டைக் காக்க முயலப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம், ஈராக் மற்றும் சிரியா விவகாரத்தில் பிரான்ஸின் பங்கை வலிமைப்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள், திட்டங்களைப் பார்க்கும்போது அது சிரியா,ஈராக்குடன் நிற்கப் போவதாக தெரியவில்லை. மாறாக சிரியா, ஈராக்கைத் தாண்டி அது வியாபிக்க ஆரம்பித்துள்ளது. சிரியா,ஈராக்கில் அதன் நிலை வலுவிழந்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

6 மாதத்திற்கு முன்பே
சிரியா, ஈராக்கில் தனது பிடி தளர்ந்து வருவதை ஆறு மாதங்களுக்கு முன்பே உணர்ந்து விட்டது ஐஎஸ். இதனால்தான் அது உலக நாடுகளைக் குறி வைக்க ஆரம்பித்து விட்டது.

உங்க ஊருக்குப் போய் அடிங்க
இதன் காரணமாகவே தனது அமைப்பில் இடம் பெற்றிருந்த வெளிநாட்டுத் தீவிரவாதிகளை அவரவர் நாடுகளுக்குப் போகுமாறு ஐஎஸ் அமைப்பு உத்தரவிட்டது. இதற்குக் காரணம், அவரவர் நாட்டில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக இருக்கும் என்பதால்.

தூண்டி விட்டுத் தாக்க வைக்கும் ஐஎஸ்
ஐஎஸ் அமைப்பின் மிகப் பெரிய பலமே, சரியான முறையில் இளைஞர்களைத் தூண்டி விடுவதுதான். அவர்களுக்குள் கற்பனைகளையும், கனவுகளையும் விதைத்து அது பலிக்க வேண்டுமானால் போய் தாக்கு என்று மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்கிறது ஐஎஸ்.

சமூக வலைதளம் மூலம் உலகை வளைக்கிறது
சமூக வலைதளங்கள் மூலமாக சிரியாவில் இருந்தபடி உலகையே வளைக்கப் பார்க்கிறது ஐஎஸ். உலகம் முழுவதும் தனது விசுவாசிகளை அதிகரிக்கச் செய்து அவர்கள் மூலமாக தாக்குதல் நடத்தப் பார்க்கிறது ஐஎஸ். நைஸ் நகரில் நடந்த தாக்குதலும் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான்.

அடிப்பது நீ.. பெயர் எனக்கு
தாக்குதல் நடத்துவது தனி நபர்களாக இருந்தாலும் கூட அதன் கிரெடிட் ஐஎஸ் அமைப்புக்குத்தான் போகிறது. இதுதான் அந்த அமைப்பு மீது பலரும் விசுவாசமாக இருக்க முக்கியக் காரணம்.

தொடர் தாக்குதல்கள்
அமெரிக்காவின் ஆர்லான்டோ, இஸ்தான்புல், பாரிஸ் நகரங்களில் நடந்த தாக்குதல்கள் இப்படித்தான் நடந்தன. இவர்களை மறைமுகமாக தூண்டி விட்டது ஐஎஸ் அமைப்பின் மீதான காதலும், கொள்கையும்தான்.

இந்தியா உஷாராக இருக்க வேண்டும்
இதுபோன்ற தாக்குதல்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் இந்தியாவிலும் நடக்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து திருந்தி வந்ததாக கூறப்படும் நபர்கள் விஷயத்தில் தொடர்ந்து கண்காணிப்பு தேவை என்று அது மாநில அரசுகளையும், மத்திய அரசையும் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications