உயிரை பணயம் வைத்து மூன்றே நாட்களில் மீட்ட மீட்பு படையினர்
உயிரை பணயம் வைத்து மூன்றே நாட்களில் மீட்பு குழுவினர் எந்த வித பாதிப்பும் இன்றி சிறுவர்களையும் பயிற்சியாளரையும் மீட்டனர்.
Recommended Video

பாங்காங்: உயிரை பணயம் மூன்றே நாட்களில் மீட்பு குழுவினர் எந்தவித பாதிப்பும் இன்றி சிறுவர்களையும் பயிற்சியாளரையும் மீட்டனர்.
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகைக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஜூ்ன் 23-ஆம் தேதி இளம் கால்பந்து வீரர்கள் தங்களது பயிற்சியாளருடன் சென்றனர். மொத்தம் 12 சிறுவர்களும் ஒரு பயிற்சியாளரும் சென்றிருந்தனர்.

அவர்கள் அங்கு சென்ற போது கனமழை கொட்டியது. இதையடுத்து அவர்களால் வெளியேற முடியவில்லை. குகையானது 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்து விட்டது. குகையும் குறுகலாக இருந்தது.
வேறு வழியில் குகையை சென்றடையலாம் என்றால் மலையிலிருந்து 1 கி.மீ. ஆழம் கொண்டிருந்தது. இதனால் பாறையை உடைத்தெடுத்து மீட்கலாம் என்று திட்டமிட்டனர். ஆனால் பாறையை உடைத்தால் முழுவதுமாக சரிந்துவிடும் என்பதால் அந்த யோசனையும் கைவிடப்பட்டது.
இதனால் ஸ்கூபா டைவிங் கலைஞர்கள் 19 பேர் வரவழைக்கப்பட்டனர். இதனிடையே அவர்கள் மீட்பது குறித்து பயிற்சி எடுத்து கொண்டனர். நீருக்கு அடியில் செல்லக் கூடிய நீர் மூழ்கி கப்பலை மிகவும் குறுகிய நேரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்தது.
இதையடுத்து மீட்பு பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதையடுத்து நேற்றும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இன்றைய தினம் மீதமுள்ள 4 சிறுவர்களும் ஒரு பயிற்சியாளரும் மீட்கப்பட்டனர்.
மூன்றே நாளில் மிகவும் சவாலான குகையிலிருந்து சிறுவர்கள் மீட்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மீட்பு படையினருக்கு பாராட்டுகள் குவிந்தன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications