தாய்லாந்து கோவில் குண்டுவெடிப்புக் குற்றவாளி டெல்லி வழியாக துருக்கிக்கு தப்பியோட்டம்
பாங்காக்: எரவான் பிரம்மதேவன் இந்துக் கோவில் குண்டுவெடிப்பிற்கு காரணமான முக்கியக் குற்றவாளி துருக்கி தப்பிச் சென்று விட்டதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ளது எரவான் பிரம்மதேவன் கோவில். இது இந்துக் கோவிலாகும். இங்கு கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் உடல் சிதறி பலியாயினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தாய்லாந்து அரசு கருதியது.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக, கோவிலின் கண்காணிப்பு கேமராவில் பதிவான, மஞ்சள் டி - சர்ட் அணிந்த, குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை, போலீசார் தேடி வருகின்றனர். இவர் துருக்கிக்கு தப்பிச் சென்று விட்டதாக தாய்லாந்து போலீசார் கூறுகின்றனர்.

குண்டுவெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆகஸ்ட் 31ம் தேதி துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லுக்கு டாக்காவில் இருந்து டெல்லி, அபுதாபி மார்க்கமாக தப்பிச் சென்றதாக தெரிய வந்துள்ளது. இந்த நபரின் பெயர் அபுதுரஹ்மானஅ அபுதுசட்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளன். இவர் சீன பாஸ்போர்ட் வைத்துள்ளார்.
குண்டு வெடிப்புக்கான நோக்கம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், பாங்காங்க் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேரை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
இது தொடர்பாக மலேசியா போலீஸ் ஐ.ஜி. காலித் அபுபக்கர் கூறுகையில், "தாய்லாந்து குண்டுவெடிப்பு தொடர்பாக, பாகிஸ்தானியர் உட்பட, மூன்று பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த தகவல், தாய்லாந்து போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரையும், தாய்லாந்திடம் ஒப்படைக்க மாட்டோம்; நாங்கள் முழுமையாக விசாரித்த பிறகே, அது குறித்து முடிவு செய்வோம்" என்றார்.
ஏற்கனவே, குண்டுவெடிப்பு தொடர்பாக, பிலால் முகமது, யூசுப் மெராலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிலால் முகமது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'குண்டுவெடிப்பு திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட இசான், சீனாவிற்கு தப்பிவிட்டான்' எனத் தெரிவித்திருந்தான்.
இது தவிர கடந்த வாரம், இரண்டு இந்தியர்களை பிடித்து விசாரித்த தாய்லாந்து போலீசார், 'குண்டு வெடிப்பில் அவர்களுக்கு தொடர்பில்லை' எனக் கூறி, விடுவித்து விட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications