ஐஎஸ்ஐஎஸ்ஸில் சேர்த்துவிட 2 குழந்தைகளை கடத்திய தாய் என்ற பேய்
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் வசித்து வந்த செசன்யாவைச் சேர்ந்த பெண் தனது இரண்டு குழந்தைகளை கடத்திக் கொண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்றுவிட்டார்.
செசன்யாவைச் சேர்ந்தவர் உம்(33). அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாந்து வந்த இடத்தில் மார்க் என்பவரை சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு லூக்கா(9) என்ற மகனும், ஆயிஷா(8) என்ற மகளும் உள்ளனர். 2008ம் ஆண்டு வரை தலையில் முக்காடு அணியாமல், தொழுகாமல் இருந்த உம் 2009ம் ஆண்டில் இருந்து மதப்பற்று மிக்கவராக மாறிவிட்டார்.

உம் தனது கணவர் மார்க்கை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு 2 காதலர்கள் மூலம் 2 குழந்தைகளை பெற்றுள்ளார். மார்கிடம் கேட்காமலேயே குழந்தைகளை இஸ்லாமியப் பள்ளியில் சேர்த்தார்.
இந்நிலையில் உம் தனது காதலர்களுக்கு பிறந்த குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு லூக்கா மற்றும் ஆயிஷாவை நெதர்லாந்தில் இருந்து கடத்த முடிவு செய்தார். அதுவும் குழந்தைகளோடு சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர திட்டமிட்டார். இதற்கிடையே உம் தனது குழந்தைகளோடு கிரீஸ் செல்ல விமான டிக்கெட் வாங்கியுள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மார்க்கிடம் தெரிவித்தார்.
அதற்குள் உம், குழந்தைகளோடு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர்கள் தற்போது சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ரக்கா நகரில் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் பல குடும்பங்கள் நெதர்லாந்தில் இருந்து சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர 12 சிறுவர்கள் யாருக்கும் தெரியாமல் நெதர்லாந்தில் இருந்து சிரியா கிளம்பிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications