நீதித்துறை அரசியல் மயமானதால் சர்வதேச நீதிபதிகள் விசாரணையை ஐ.நா. வலியுறுத்தியது: மனித உரிமை ஆணையர்
கொழும்பு: இலங்கையில் நீதித்துறை அரசியல் மயமானதால் தான் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள சர்வதேச நீதிபதிகள் விசாரணையை ஐ.நா. வலியுறுத்தியது என்று அதன் மனித உரிமை ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசேன் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தார். அப்போது இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை நடவடிக்கை பற்றி கேட்டு அறிந்தார்.

அதன் பின்னர் கொழும்புவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது: ஐநா மனித உரிமைக் கவுன்சில் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை குறித்து நிறைவேற்றிய தீர்மானம் பற்றிய தவறான புரிதல்களும் காணப்படுவதாகக் கூறிய அல் ஹுசேன், அந்தத் தீர்மானம், இலங்கையின் இறையாண்மையிலோ அல்லது சுதந்திரத்திலோ தேவையற்ற வகையில் தலையிடும் ஒரு முயற்சியல்ல என்றார்.
இலங்கை அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, அதன் பலவீனத்தைக் காட்டவில்லை, மாறாக ,அதன் பலத்தையே காட்டியது என்றார். அத்தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொண்ட அந்த நிகழ்வு, தனது கடந்த கால சம்பவங்களை நேர்மையுடன் எதிர்கொண்டு அது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க இலங்கை எடுத்துக்கொண்ட உறுதிப்பாடாகவே கருதப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் பல திறமையான நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் இருந்து, பல ஆண்டுகளாக நீதித்துறை அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டது என்றார் அவர். கடந்த பல ஆண்டுகளாக, இலங்கையின் வரலாற்றில் பல நீதித்துறை தோல்விகள் ஏற்பட்டிருக்கின்றன. இதை இலங்கைப் பிரதமரே வெளிப்படையாக கடந்த ஜனவரி 27-ம் தேதி நடந்த நாடாளுமன்ற விவாதத்தில் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.
உலக நாடுகள் இலங்கை ஒரு வெற்றிகரமான நாடாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறது. இலங்கையில் நீடித்த அமைதியை உருவாக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை இப்போது உலகம் கண்டிருக்கிறது என்றார். எனவே தான் கடந்த அக்டோபரில் இலங்கை குறித்த அந்த தீர்மானத்தை மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்ற உலக நாடுகள் ஆதரவு தெரிவித்தன என்றார்.
மேலும் கடந்த தேர்தலில் இலங்கை மக்கள் மாற்றத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் ஆதரவாக வாக்களித்தனர் என்று கூறிய அல் ஹுசேன், சிறுபான்மை தீவிரவாதக் குரல்கள் அச்சத்தை உருவாக்கி நிலைமையை குழப்புவதில் வெற்றி கண்டால் அது பெரும் அவமானகரமானதாகிவிடும்.
அரசு மாற்றங்களை உருவாக்க தேவையான மன உறுதியைக் காட்டியிருக்கிறது. ஆனால் இலங்கையின் வடக்கு, கிழக்கு, கொழும்பின் தெற்கு பகுதியில் அச்சமான சூழ்நிலை நிலவி வருவதை தான் பார்த்ததாக ஹுசேன் கூறியுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications