பிரிட்டனில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இங்கிலாந்து ராணி எலிசபத்தை சந்தித்தார் தெரசா மே!
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் அரசு அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மையை இழந்த பிரதமர் தெரசா மே ராணி எலிசபத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வந்தது. இதில், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிற்கட்சிகள் போட்டியிட்டன. வாக்குப் பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 649 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 261 இடங்களை பிடித்துள்ளது. இன்னும் ஒரு சில இடத்தின் முடிவுகள் தான் மீதமுள்ளது. இதனால், கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு தேவையான மெஜாரிட்டையை இழந்துள்ளது. அங்கு ஆட்சி அமைக்கும் கட்சி குறைந்தபட்சம் 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.
இதனால், புதிய அரசை அமைப்பதற்கு பிரதமர் தெரசா மே இதர கட்சிகளின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பிரிட்டனில் தொங்கு நாடளுமன்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
எஸ்என்பி கட்சி 35 இடங்களை பிடித்துள்ளன. இதர கட்சிகள் 35 இடங்களை பிடித்துள்ளன. இதனிடையே டெமகரட்டிக் யூனியனிஸ்ட் கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்களின் ஆதரவை கோரியுள்ளார் தெரசா மே. எனினும், பிரிட்டனில் அரசு அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் அந்நாட்டின் ராணி எலிசபத்திடம் முன் அனுமதி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
இந்நிலையில் பிரதமர் தெரசா மே இன்று பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று ராணி எலிசபத்தை சந்தித்தார். டெமகரட்டிக் யூனியனிஸ்ட் கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ள கடிதத்தை ராணியிடம் அவர் அளித்தார். இதையடுத்து, அங்கு புதிய கூட்டணி அரசுக்கு தலைமையேற்க பிரதமர் தெரசா மேவுக்கு ராணி எலிசபத் அனுமதி அளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications