மிஷினரிக்குள் புகுந்து மூத்த கன்னியாஸ்திரிகள் மூவர் பலாத்காரம் செய்து படுகொலை!
புஜும்புரா: 80 வயதையொட்டிய இத்தாலி நாட்டு மூத்த கன்னியாஸ்திரிகள் மூன்று பேர் ஆப்பிரிக்க நாடான புருண்டியில் பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள பின்தங்கிய நாடுகளில் ஒன்று புருண்டி. இதன் தலைநகர் புஜும்புரா. இங்குள்ள மிஷினரியொன்றில் கன்னியாஸ்திரிகளாக சேவை செய்த ஒலிகா ரசிட்டி (75), லூசியா புலிசின் (82) மற்றும் பெர்னாடட்டா போஜியான் (79) ஆகிய மூன்று மூத்த கன்னியாஸ்திரிகள் பலாத்காரத்திற்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டவர்களாகும்.
ஏழைகளுக்கு சேவை
இத்தாலியை சேர்ந்த இம்மூன்று கன்னியாஸ்திரிகளும், 7 ஆண்டுகளாக புஜும்புராவிலுள்ள மிஷினரியில் தங்கியிருந்து ஏழை, எளிய மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வந்தனர்.
மதமாற்றம் அதிகரிப்பு
பல ஆண்டுகளாகவே கிறிஸ்தவ மிஷினரிகள் ஆப்பிரிக்க நாடுகளில் காலூன்றி சேவையாற்றியதன் விளைவாக பலரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் புருண்டி நாட்டில் மட்டும் 60 சதவீத மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். உலகின் மிக மோசமான ஏழ்மை நிலவும் ஐந்து நாடுகளில் புருண்டியும் ஒன்று என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
மதமாற்றத்திற்கு எச்சரிக்கை?
மதமாற்றத்திற்கு எதிராக ஆப்பிரிக்காவின் பூர்வ குடிமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே, மதமாற்றத்திற்கு எதிரான எச்சரிக்கையாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அடுத்தடுத்த இரவுகளில் கொலை
ஒலிகா ரசிட்டி மற்றும் லூசியா புலிசின் (82) ஆகியோர் 7ம்தேதி இரவில் மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். மறுநாள் காலை போலீசார் வந்து விசாரணை நடத்தி சென்றனர். இந்நிலையில் 8ம்தேதி அதே மிஷினரி கட்டிடத்தில் பயமின்றி பெர்னாடட்டா போஜியான் (79) தங்கியிருந்தார். அவரும் அன்று இரவு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார்.
வாடிகன் இரங்கல்
மூன்று கன்னியாஸ்திரிகள் கொலை செய்யப்பட்டதற்கு வாடிகன் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. ஏழைகளுக்காக பாடுபட்டவர்களுக்கு இந்த முடிவு ஏற்பட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications