மிஷினரிக்குள் புகுந்து மூத்த கன்னியாஸ்திரிகள் மூவர் பலாத்காரம் செய்து படுகொலை!
புஜும்புரா: 80 வயதையொட்டிய இத்தாலி நாட்டு மூத்த கன்னியாஸ்திரிகள் மூன்று பேர் ஆப்பிரிக்க நாடான புருண்டியில் பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள பின்தங்கிய நாடுகளில் ஒன்று புருண்டி. இதன் தலைநகர் புஜும்புரா. இங்குள்ள மிஷினரியொன்றில் கன்னியாஸ்திரிகளாக சேவை செய்த ஒலிகா ரசிட்டி (75), லூசியா புலிசின் (82) மற்றும் பெர்னாடட்டா போஜியான் (79) ஆகிய மூன்று மூத்த கன்னியாஸ்திரிகள் பலாத்காரத்திற்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டவர்களாகும்.
ஏழைகளுக்கு சேவை
இத்தாலியை சேர்ந்த இம்மூன்று கன்னியாஸ்திரிகளும், 7 ஆண்டுகளாக புஜும்புராவிலுள்ள மிஷினரியில் தங்கியிருந்து ஏழை, எளிய மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வந்தனர்.
மதமாற்றம் அதிகரிப்பு
பல ஆண்டுகளாகவே கிறிஸ்தவ மிஷினரிகள் ஆப்பிரிக்க நாடுகளில் காலூன்றி சேவையாற்றியதன் விளைவாக பலரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் புருண்டி நாட்டில் மட்டும் 60 சதவீத மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். உலகின் மிக மோசமான ஏழ்மை நிலவும் ஐந்து நாடுகளில் புருண்டியும் ஒன்று என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
மதமாற்றத்திற்கு எச்சரிக்கை?
மதமாற்றத்திற்கு எதிராக ஆப்பிரிக்காவின் பூர்வ குடிமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே, மதமாற்றத்திற்கு எதிரான எச்சரிக்கையாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அடுத்தடுத்த இரவுகளில் கொலை
ஒலிகா ரசிட்டி மற்றும் லூசியா புலிசின் (82) ஆகியோர் 7ம்தேதி இரவில் மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். மறுநாள் காலை போலீசார் வந்து விசாரணை நடத்தி சென்றனர். இந்நிலையில் 8ம்தேதி அதே மிஷினரி கட்டிடத்தில் பயமின்றி பெர்னாடட்டா போஜியான் (79) தங்கியிருந்தார். அவரும் அன்று இரவு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார்.
வாடிகன் இரங்கல்
மூன்று கன்னியாஸ்திரிகள் கொலை செய்யப்பட்டதற்கு வாடிகன் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. ஏழைகளுக்காக பாடுபட்டவர்களுக்கு இந்த முடிவு ஏற்பட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications