ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க காத்திருக்க முடியாது: அமெரிக்கா அமைச்சர் ஜான் கெர்ரி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இலங்கையில் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்பதற்காக காத்திருக்க முடியாது என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான் உட்பட 12 நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்தன.

Time to pursue lasting peace in Sri Lanka is now: Kerry tells Rajapaksa

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியதாவது:

இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், இலங்கையில் அமைதியை நிலைநாட்டவும் இதுவே நல்ல தருணம். இலங்கை அரசு, அந்நாட்டு மக்களுக்கு நீதி வழங்கும் என்று நினைத்து நீதி கிடைப்பதற்காக காத்திருக்க முடியாது.

அந்நாட்டில் வாழும் மக்கள், அவர்களது அடிப்படை உரிமையான ஜனநாயகத்தையே கேட்கிறார்கள். அதனை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டியது உலக நாடுகளின் கடமை.

இதற்காகத்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாடுபட்டு வருகின்றன. இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இதுவே நல்ல வாய்ப்பு என ராஜபக்சேவுக்கு தீர்மானம் அறிவுரை வழங்கியுள்ளது.

இவ்வாறு ஜான் கெர்ரி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+