போரின் கோரப்பிடியில் மத்திய கிழக்கு! ஈரான்-இஸ்ரேல் மோதலில் இதுவரை நடந்தது என்ன?
தெஹ்ரான்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பனிப்போர் நீடித்து வந்த நிலையில், தற்போது நேரடியாகவே இருவரும் போர் களத்தில் குதித்திருக்கிறார்கள். இதனால் மத்திய கிழக்கு பெரும் பதற்றத்தை சந்தித்திருக்கிறது. கடந்த 2010 தொடங்கி 2024 வரை இரு நாடுகளுக்கு இடையில் நடந்த மோதல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.
எல்லாவற்றிற்கும் தொடக்கமாக 1979தான் இருந்தது. அப்போதைய ஈரான் ஆட்சியாளரான முகமது ரேசா ஷா, இஸ்ரேல் நம்முடைய நட்பு நாடு என்று அறிவித்தார். இது இஸ்லாமிய மக்களிடையேயும், புரட்சிகர குழுக்களுக்கிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடந்த புரட்சியில் ஷா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.'

பின்னர் 1982ல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தது. இதற்கு பதிலடி கொடுக்கவே, ஹிஸ்புல்லா அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியது ஈரான்தான். இவர்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலால், லெபானானிலிருந்து இஸ்ரேல் பதறியடித்து ஓடியது. அப்போது முதல் இப்போது வரை, லெபனானை ஹிஸ்புல்லாதான் அதிகாரம் செலுத்தி வருகிறது.
இது இஸ்ரேலுக்கு பெருத்த அவமானமாக ஆகிவிட்டது. எனவே, ஈரானும்-இஸ்ரேலும் பனிப்போரில் ஈடுபட தொடங்கின. இந்த மோதல் கடந்த 2010ம் ஆண்டு உச்சத்தை எட்டியது.
2010ல் இஸ்ரேல் தனது முதல் சைபர் தாக்குதலை ஈரான் மீது நேரடியாக நடத்தியது. ஈரானின் நடான்ஸ் அணுசக்தி தளத்தில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்காக 'ஸ்டக்ஸ்நெட்' எனப்படும் வைரஸ் பயன்படுத்தப்பட்டது. இதனை அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து உருவாக்கின என்று ஈரான் குற்றம்சாட்டியது.
2012ல் ஈரானிய அணு விஞ்ஞானி மொஸ்டாபா அஹ்மதி-ரோஷன் தெஹ்ரானில் வைத்து கொல்லப்பட்டார். பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர், அவரது காருக்குள் வெடிகுண்டை வீசியிருக்கின்றனர். இதில் ரோஷன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தாக்குதலுக்கும் இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியது.
2018ல் அணு சக்தி குறித்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேல் வெளிப்படையாக கைகோர்த்தது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்று நெதன்யாகு அப்போதிலிருந்து வலியுறுத்தி வருகிறார். அதே ஆண்டில் மே மாதம், சிரியாவில் இருந்த ஈரானின் ராணுவ கட்டமைப்பை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
2020ல் இந்த தாக்குதல் மூலம், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தன்னை இணைத்துக்கொண்டது. அதாவது பாக்தாத்தில் வைத்து ஈரானின் புரட்சிகரக் காவலர்களின் வெளிநாட்டுப் பிரிவின் தளபதியான ஜெனரல் காசிம் சுலைமானியை, ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொலை செய்தது. இதனை இஸ்ரேல் பெரும் அளவில் ரசித்து வரவேற்றது.
2021ல் அணு ஆயுதத் திறனை வளர்ப்பதற்காக ஈரான் ரகசிய திட்டத்தை செயல்படுத்தியது. திட்டத்தின் மூளையாக மொஹ்சென் ஃபக்ரிசாதே இருந்தார். இதே ஆண்டில் இவரை குறிவைத்து இஸ்ரேல் கொலை செய்தது.
2022ல் ஈரானின் அணு ஆயுதங்களுக்கு எதிரான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமரும், அமெரிக்க அதிபரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமாக்கியது.
2024ல் டமாகஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதில் 2 முக்கிய தளபதிகள் உட்பட 7 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், இதனை அந்நாடு மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி? துபாய் உள்பட அரபு நாடுகளுக்கு ஈரான் கடும் வார்னிங் -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications