அபுதாபியில் தமுமுக சார்பில் நடந்த ரத்ததான முகாம்
அபுதாபி: அபுதாபி தமுமுக சார்பில் அங்கு ரத்ததான முகாம் நடைபெற்றது.
டிசம்பர் 19ம் தேதி அன்று மாலை 5 மணியளவில் அபுதாபி தமுமுகவின் சார்பில் அபுதாபி காலிதியா ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அபுதாபி வாழ் தமிழ் சகோதரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சி அபுதாபி தமுமுக பொருளாளர் பரங்கிப்பேட்டை அபுல்ஹசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ரத்ததான முகாமில் அபுதாபி தமிழ்ச்சங்க தலைவர் திரு. ரெஜினால்டு அவர்களும், அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயலாளர் ஜனாப் எஸ்.ஏ.சி. ஹமீது அவர்களும், இதர நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கவுரவித்தனர்.

அபுதாபி மண்டல தமுமுக துணைச் செயலாளர் அடியற்கை ஏ. ஐ. சேக்தாவுது, மர்கஸ் பொறுப்பாளர் உஸ்மான் அலி மற்றும் அபுதாபி மண்டல மமக செயலாளர் அடியற்கை அல் அமீன், சிட்டி பொறுப்பாளர் ஆயங்குடி ஹபீபுல்லாஹ், பனியாஸ் கிளை செயலாளர் ஆத்தங்கரை நஜிமுதீன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications