ஷார்ஜாவில் ஆடைகளை சேகரித்து ரெட் கிரசென்ட் அமைப்பிடம் வழங்கிய தமிழக மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் படிக்கும் தமிழக பள்ளி மாணவர்கள் துணிமணிகளை சேகரித்து அமீரக செம்பிறைச் சங்கத்திடம்(ரெட் கிரசென்ட்) வழங்கினர்.

ஷார்ஜா தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ சங்கரன், திவ்யஸ்ரீ சங்கரன், கின்சுக் பால்கே மற்றும் அஸ்வின் அஜித் ஆகியோர் சுற்றுச்சூழல், சமூக சேவை, மரம் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரமலான் மாதம் ஈகையின் மாதமாகும். இதனையொட்டி அவர்கள் உபயோகப்படுத்தக்கூடிய அளவில் உள்ள பழைய துணிகளை தாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும், சக பள்ளி மாணவ, மாணவியரிடமும் சேகரித்தனர்.
தாங்கள் சேகரித்த ஆடைகளை அவர்கள் அமீரக செம்பிறைச் சங்கத்திடம் வழங்கினர்.












Click it and Unblock the Notifications