கியூபா செல்கிறது அமெரிக்கா உயர் அதிகாரிகள் குழு
ஹாவானா: கியூபாவுடனான தூதரக உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும் நிலையில் அமெரிக்காவின் உயர் அதிகாரிகளின் குழு அந்நாட்டுக்குச் செல்ல இருக்கிறது.
கியூபா மீது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தது. இரு நாடுகளிடையே தூதரக உறவு உட்பட அனைத்து உறவும் துண்டிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் கியூபா நாட்டின் அதிபர் ரவூல் காஸ்ட்ரோ ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இருநாடுகளிலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தோர் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்த அமெரிக்கா அரசின் உயர்நிலைக் குழு ஒன்று கியூபா செல்கிறது. இம்மாத இறுதியில் இக்குழு கியூபா செல்ல உள்ளது.












Click it and Unblock the Notifications