இந்தோனேசியாவில் 98 அடி ஆழத்தில் விழுந்த பேருந்து.. 21 பேர் பலி.. 9 பேர் காயம்
ஜாவா: இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் நடந்த விபத்தில் பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள் 21 பேர் பலியாகிவிட்டனர்.
மேற்கு ஜாவா தீவில் சுகாபூமி மாவட்டத்தில் உள்ள சிட்ராக் ஆற்றுக்கு சுற்றுலா செல்வதற்காக தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்களை பேருந்து ஏற்றிக் கொண்டு சென்றது. அங்கு ஏராளமான கூர்மையான வளைவுகள் இருந்தது.
இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 98 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 21 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த மீட்பு படையினர் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்தி்ல படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கடந்த மாதம் சிசாகரன் பகுதியில் நடந்த விபத்தில் மினி பஸ் ஒன்று 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானதும் 4 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.