இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், இன்னும் பிரச்சனை ஓய்ந்த பாடு இல்லை.. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் மறைமுகப் போர், தற்போது இந்தியக் கப்பல் ஊழியர்களின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபற்றிடிரம்ப் வைத்த குற்றச்சாட்டு மற்றும் பின்னணி பற்றி பார்ப்போம்


அமெரிக்கா - ஈரான் டீல் 'லீக்' சர்ச்சை

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த முந்தைய பேச்சுவார்த்தைகளைக் குறிப்பிட்டு, "அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மிக அருகில் நெருங்கிவிட்டன" என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். "இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) புரிந்துணர்வு ஒப்பந்தம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Trump Slams Iran Over Drone Attacks on Indian Ships Rejects Leaked Details of Peace Deal

ஆனால், இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக மறுத்துள்ளார். "ஈரான் தரப்பில் இருந்து கசிந்த ஒப்பந்த விவரங்கள் உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை. நேர்மையாகச் செயல்படத் தெரியாத ஈரான் போன்ற ஆட்களுடன் 'நல்லெண்ண' அடிப்படையில் பேசவே முடியாது" என்று ட்ரம்ப் விளாசியுள்ளார்.

மேலும், "ஈரானுக்குப் பணம் எதுவும் உடனடியாக வழங்கப்படாது, எந்த நிதியும் ரிலீஸ் செய்யப்படவில்லை" என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸும் இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் கவலைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஈரான் தனது கடமைகளை நிறைவேற்றினால் மட்டுமே பொருளாதாரப் பலன்கள் கிடைக்கும் என்றும் வென்ஸ் கூறியுள்ளார்.

இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

இந்த அரசியல் மோதல்களுக்கு மத்தியில், ஓமன் கடற்கரைக்கு அருகே இந்திய ஊழியர்களைக் கொண்ட மூன்று கப்பல்கள் மீது இந்த வாரம் பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலாவு நாட்டுக் கொடி ஏந்திய 'எம்டி செட்டபெல்லோ' என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், துரதிர்ஷ்டவசமாக மூன்று இந்திய மாலுமிகள் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களை 'ஆழ்ந்த கவலைக்குரியது' மற்றும் 'மிகவும் கவலைக்குரியது' என்று வர்ணித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், உடனடியாக இத்தகைய அத்துமீறல்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

"டிரம்ப்" உடைத்த அதிரடி உண்மை

இந்நிலையில், ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேறிய இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் நேற்று இரவும் ட்ரோன் (Drone) தாக்குதல் நடத்த முயன்றதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் வார்னிங்

"ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே இந்தியக் கப்பல்களுக்கு எதிராக ஈரான் நடத்திய, முறியடிக்கப்பட்ட ட்ரோன் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவர்கள் தங்களை உடனே திருத்திக்கொள்ள வேண்டும், அதுவும் மிக வேகமாக!"

மோதல் எப்போது முடிவுக்கு வரும்

பல மாதங்களாக நீடித்து வரும் இந்த அமெரிக்க-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியது போல, இரு நாடுகளும் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட "நெருக்கமாக" இருந்தாலும், ட்ரம்பின் தற்போதைய கடுமையான எதிர்வினைகள் இந்த ஒப்பந்தம் இப்போதைக்கு முழுமையாக முடிவடையாது என்பதைக் காட்டுவதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஈரான் தரப்பு இந்த ஒப்பந்தத்தை முழுமையாக மதித்து, இந்தியக் கப்பல்கள் மீது நடத்தும் இது போன்ற ட்ரோன் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தினால் மட்டுமே, இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த நீண்ட காலப் பிரச்சினை விரைவில் ஒரு சுமுகமான முடிவுக்கு வரும். அதுவரை மத்திய கிழக்கில் பதற்றமான சூழலே நீடிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+