“8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன”.. இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் சொன்ன புது தகவல்!
வாஷிங்டன்: "இந்தியா - பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை 8 மாதங்களில் நிறுத்தினேன். நான் இந்தியா, பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்குள் சண்டை வெடித்தது. 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவர்களிடம், 'சமாதானத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை' என்று தெரிவித்தேன். அதன் பிறகே அவர்கள் போரை நிறுத்தினர்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவ படைகள் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து மே 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவம் டிரோன்களைக் கொண்டும், ஏவுகணைகளை கொண்டும் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. இதையடுத்து, பேச்சுவார்த்தையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களின் எண்ணிக்கை குறித்து மீண்டும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த மோதலில்தான், தான் சமாதானத் தூதுவராகச் செயல்பட்டு, இரு நாடுகளுக்கிடையே ஏற்படவிருந்த பெரும் போரைத் தடுத்ததாக டிரம்ப் மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மியாமி நகரில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய டொனால்ட் டிரம்ப், "இந்தியா - பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை 8 மாதங்களில் நிறுத்தினேன். நான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது போர் தொடங்கப்போகிறது என்று செய்தித்தாள்களில் படித்தேன். எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அணு ஆயுதம் ஏந்திய நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போர் செய்யப்போவதை நான் அறிந்தேன்.
அவர்களிடம், 'சமாதானத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை' என்று தெரிவித்தேன். அதன் பிறகு அடுத்த நாள் 'நாங்கள் சமாதானம் செய்து கொண்டோம்' என்று எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர்கள் போரை நிறுத்தினர். " என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போரை டிரம்ப் நிறுத்தவில்லை என்று இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. எனினும், டிரம்ப் தான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகச் சொல்வதை இன்னும் நிறுத்தவில்லை.
டிரம்ப் இதற்கு முன்பு ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறினார். தற்போது, 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ளார்.
-
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான்












Click it and Unblock the Notifications