Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன”.. இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் சொன்ன புது தகவல்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: "இந்தியா - பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை 8 மாதங்களில் நிறுத்தினேன். நான் இந்தியா, பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்குள் சண்டை வெடித்தது. 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவர்களிடம், 'சமாதானத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை' என்று தெரிவித்தேன். அதன் பிறகே அவர்கள் போரை நிறுத்தினர்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவ படைகள் தாக்குதல் நடத்தியது.

Trump Updates His India Pakistan Peace Narrative Claims 8 Planes Were Shot Down

இதையடுத்து மே 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவம் டிரோன்களைக் கொண்டும், ஏவுகணைகளை கொண்டும் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. இதையடுத்து, பேச்சுவார்த்தையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களின் எண்ணிக்கை குறித்து மீண்டும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த மோதலில்தான், தான் சமாதானத் தூதுவராகச் செயல்பட்டு, இரு நாடுகளுக்கிடையே ஏற்படவிருந்த பெரும் போரைத் தடுத்ததாக டிரம்ப் மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மியாமி நகரில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய டொனால்ட் டிரம்ப், "இந்தியா - பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை 8 மாதங்களில் நிறுத்தினேன். நான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது போர் தொடங்கப்போகிறது என்று செய்தித்தாள்களில் படித்தேன். எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அணு ஆயுதம் ஏந்திய நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போர் செய்யப்போவதை நான் அறிந்தேன்.

அவர்களிடம், 'சமாதானத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை' என்று தெரிவித்தேன். அதன் பிறகு அடுத்த நாள் 'நாங்கள் சமாதானம் செய்து கொண்டோம்' என்று எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர்கள் போரை நிறுத்தினர். " என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் போரை டிரம்ப் நிறுத்தவில்லை என்று இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. எனினும், டிரம்ப் தான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகச் சொல்வதை இன்னும் நிறுத்தவில்லை.
டிரம்ப் இதற்கு முன்பு ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறினார். தற்போது, 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+