ஜப்பான் பூங்காவில் இரட்டை குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்
டோக்கியோ: ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்றில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளார், 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உட்சுனோமியா நகர். மக்கள் தொகை அதிகம் உள்ள அந்த நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இன்று திருவிழா நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் காலை 11.30 மணி அளவில் பூங்காவில் இரண்டு குண்டுகள் வெடித்தன. பூங்காவில் சைக்கிள்களை நிறுத்தும் இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். அவரது உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு குண்டு வெடிப்பில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். குண்டு வெடிப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். திருவிழா நடந்த இடம் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இந்த சம்பவத்தால் பூங்காவில் நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications