ஜெத்தாவில் திடீர் என கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளம்: 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஜெத்தா: ஜெத்தாவில் திடீர் என்று கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 பேர் பலியாகியுள்ளனர், 2 குழந்தைகள் மாயம் ஆகியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் செவ்வாய்க்கிழமை திடீர் என்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் சாலைகளில் வெள்ளநீர் ஆறாக ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மக்கா அருகே உள்ள இடத்தில் வெள்ளநீர் அதிக அளவில் ஓடியதால் 16 பேர் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர்.

Two dead in flash floods in Jeddah

குறுகிய நேரத்தில் 22 செ.மீ. மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தின்போது சாலையை கடக்கையில் மின் கம்பத்தை தொட்ட 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர், மேலும் 2 குழந்தைகள் மாயமாகியுள்ளனர். குழந்தைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் கெய்ரோவில் இருந்து ஜெத்தா வந்த எகிப்து விமானம் ஒன்று அண்மையில் திறக்கப்பட்ட மதினா நகர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. நேற்றைய வெள்ளம் ஜெத்தா மக்களுக்கு 2009ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுபடுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+