For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூசிலாந்து கார் விபத்து- 2 இந்தியர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி!

Google Oneindia Tamil News

மெல்பர்ன்: நியூசிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான முரிவாய் கடற்கரை பகுதியில் நேற்று ஏற்பட்ட கார் விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட 4 பேர் பலியாகி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் தலைநகரான ஆக்லாண்டில் குயின்ஸ் அகடமி என்ற கல்வி நிறுவனத்தில் இந்தியரான தில்பிரித் என்பவர் பணியாற்றி வருகிறார். அவரது நண்பர்களான இமத் திப் என்ற லெபனான் நாட்டவரும், சையது ஜாப்ரி என்ற பாகிஸ்தானியரும் முறையே மார்க்கெட்டிங் பிரிவு அலுவலராகவும், ஒரு பேராசிரியராகவும் பணி புரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் புல்கித் மல்ஹோத்ரா என்ற இந்தியர் ஒருவர் தில்ப்ரீத்சிங் அழைப்பின் பேரில் நியூசிலாந்து சென்றிந்தார்.

Two Indians named in New Zealand car crash

இவர்கள் நால்வரும் இணைந்து நேற்று அந்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான மேற்கு ஆக்லாந்தில் உள்ள முரிவாய் கடற்கரையை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது திடீரென கட்டுபாட்டை இழந்த கார், சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து, உருண்டு கடலுக்குள் பாய்ந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அவசர உதவி குழு சம்பவ இடத்திற்கு உடனடியாக காரை நீரில் இருந்து வெளியே எடுத்தது. இந்த விபத்தில் புல்கித் மல்ஹோத்ரா மற்றும் தில்பிரித் சிங் உள்ளிட்ட நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டிவந்தது யார் என்பது தெரியவில்லை.

முரிவாய் கடற்கரையில் நடைபெறும் இரண்டாவது விபத்து இதுவாகும். கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இதே போன்றதொரு விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து நடைபெற்ற கடற்கரை சாலையில் கார் ஓட்டுவதற்கு ஆக்லாந்து நிர்வாகத்திடம் தனியாக உரிமம் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

English summary
Two Indians have been named among the victims of a car crash along Auckland's Muriwai beach, a media report said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X