ஐ.எஸ்.ஐ.எஸின் அடுத்த குறி மலேசியா? - இருவர் கைது
கோலாலம்பூர்: மலேசியாவினைச் சேர்ந்த இருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 28 வயதான இவர் ஐரோப்பாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத நபர்களுடன் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் இவருக்கு க்ளாங் பள்ளத்தாக்கு மற்றும் கோலாலம்பூரில் தாக்குதல் கள் நடத்த கட்டளை பிறப்பித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றொருவர் சிரியாவில் இருந்து மலேசியாவுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்டார். 31 வயதான இவர் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் இணைந்து போரில் கலந்து கொண்டதில் காயமடைந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர்கள் இருவரும் மலேசியவின் கோலாலம்பூர் மற்றும் செலங்கோர் ஆகிய இடங்களில் சந்தித்து, மலேசியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications