ஈராக் அதிபர் மாலிக்கை விரட்டிவிட்டு புதிய அரசை அமைக்க முயற்சிக்கிறது அமெரிக்கா!
வாஷிங்டன்: ஈராக்கில் அதிபர் மாலிக்கை அகற்றிவிட்டு புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஆயுதம் தாங்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். படை உள்நாட்டு போரை நடத்தி வருகிறது. ஈராக்கின் பெரும்பான்மையான நகரங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வசமாகிவிட்டன.
ஆளும் ஈராக் அரசோ அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவோ ஏதோ ஒரு சில காரணங்களுக்காக இறுதி முடிவெடுக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஈராக்கில் தற்போதைய மாலிக் அரசை நீக்கிவிட்டு ஷியா, சன்னி, குர்து இன மக்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக் விவகாரத்தில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தரப்புக்கு சவூதி அரேபியாவும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு ஈரானும் ஆதரவாக இருக்கின்றன. இந்த நாடுகளின் ஆதரவுடன் ஈராக்கில் ஒரு பொம்மை அரசு அமைவது அப்பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்துவதற்கு வாய்ப்பாக அமெரிக்கா கருதுகிறது.
இதனால்தான் உடனடியாக சன்னி பிரிவு முஸ்லிம்கள் குழு மீது தாக்குதல் நடத்தாமல் மாலிக்கை நீக்கிவிட்டு புதிய அரசை அமைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications