செல்போனில் பேசியதற்காக பெண் பயணியை தாக்கி, காரை மோதிய உபேர் டிரைவர்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் போனில் பேசியதால் அவரை உபேர் டாக்சி டிரைவர் வாகனத்தில் இருந்து வெளியே தள்ளி அவரின் கால் மீது காரை இடித்துவிட்டு சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சாஷ்சா பங்கல்லோ என்ற 24 வயது பெண் கடந்த 6ம் தேதி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல உபேர் டாக்சியை புக் செய்தார். டாக்சி டிரைவர் பால் சாஷ்சா செல்ல வேண்டிய இடத்தை ஜிபிஎஸ் மூலம் கண்டறிய மறுத்துள்ளார். மேலும் சாஷ்சாவே வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சாஷ்சாவோ செல்போனில் பேசிக் கொண்டே பாலுக்கு வழி காட்டியுள்ளார். அவர் செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததால் பால் ஆத்திரம் அடைந்து அவரை டாக்சியில் இருந்து இழுத்து வெளியே தள்ளியுள்ளார். இதை சாலையில் சென்ற மக்கள் பார்ப்பதை உணர்ந்த பால் வேகமாக தனது சீட்டிற்கு சென்று டாக்சியை ஸ்டார்ட் செய்துள்ளார்.

இதற்கிடையே சாஷ்சா தனது உடைமைகளை டாக்சியில் இருந்து எடுத்துள்ளார். அப்போது பால் டாக்சியை கிளப்பி சாஷ்சாவின் காலில் இடித்துவிட்டு சென்றார். இதில் காயம் அடைந்த சாஷ்சா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் காயம் அடைந்த புகைப்படங்களை அவரே ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

தன் வாழ்க்கையில் இனி உபேர் டாக்சியில் பயணிக்கப் போவது இல்லை என்று சாஷ்சா தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications