ஜன்னல் இல்லாத “டச் ஸ்கிரீன்” விமானங்கள்: பிரிட்டன் விஞ்ஞானிகள் திட்டம்
லண்டன்: உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத தொடு திரை விமானம் விரைவில் உபயோகத்திற்கு வரவுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம்.
வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்கமான ஜன்னல்களுக்கு பதிலாக முழு நீள தொடுதிரைகள் பொருத்தப்படுகிறது.

டச் ஸ்கீரின் திரைகள்:
பயணிகள் அவர்களது வசதிகளுக்கு ஏற்ப அந்த ஸ்கீரீனை டச் செய்து வானத்தை பார்க்கலாம்.

கேமராக்களின் மாயம்:
விமானத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கேமிராக்கள் மூலம் ஹை-டெபனீஷன் குவாலிட்டியில் தெளிவாக விரும்பிய கோணங்களில் பார்க்க முடியும்.

அட்ஜஸ்ட் டெக்னாலஜி:
மேலும், பயணிகள் தாங்களாகவே திரையின் ஒளி மற்றும் கான்ட்ராஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.

கடினமான பொருட்கள் தேவையில்லை:
தற்போதுள்ள கண்ணாடி ஜன்னல் திரைக்கு கடினமான பொருட்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது ஏற்படும் காற்றின் அழுத்தத்தால் கண்ணாடி உடையாமல் இருக்க வேண்டும். ஆனால், புதிய டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தில் அப்படி எதுவும் தேவையில்லை.

விரைவில் பரிசோதனை:
சி.பி.ஐ எனப்படும் இந்த புதிய தொழில்நுட்பம் விரைவில் சோதனைக்கு வரும் என ஆராயச்சியாளர் சைமன் ஓகியர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications