காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு: ஜெ.வுக்கு பிரிட்டன் முன்னாள் அமைச்சர் நன்றி!

Subscribe to Oneindia Tamil

UK minister turned GTF policy advisor in CHOGM sabotage bid
லண்டன்: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரிட்டன் முன்னாள் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த மாதம் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக சட்டசபையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து, பிரிட்டன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜோன் மாரி ரெயன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து இலங்கை அமர்வுகளில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது.

இதற்காக உலகத் தமிழர் பேரவையின் சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜோன் மாரி ரெயன்,தற்போது உலகத் தமிழர் பேரவையின் கொள்கை ஆலோசகராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+