கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்!
ரஷ்யா: ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைப்பதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 95 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டிற்குச் சொந்தமான கிரிமியா பகுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 95 சதவிகிதம் பேர், ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர்.
மொத்தமுள்ள 15 லட்சம் வாக்காளர்களில் 83 சதவிகிதத்தினர் வாக்களித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 95 சதவிகிதம் பேர் ரஷ்யாவுடன் இணையும் முடிவை ஆதரித்தும், 5 சதவிகிதம் பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்பில் பங்கெடுக்காத 13 சதவிகிதம் பேரில் பெரும்பாலானவர்கள், வாக்கெடுப்பை ஏற்காதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1954ல் அப்போதைய சோவியத் குடியரசான ரஷ்யாவுட இணைந்திருந்த கிரிமியா மீண்டும் ரஷ்யாவுடன் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், இந்த வாக்கெடுப்பு நடத்த பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கிரிமியா குறித்த வாக்கெடுப்பு, சட்டப்பூர்வமானது என்றும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது முடிவில் ரஷ்யா உறுதியாக இருக்குமானால், அதன் மீது பொருளாதார தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications