நொடிக்கு நொடி பரபரப்பு.. ரஷ்யா நடத்தும் அணு ஆயுத போர் பயிற்சி.. எச்சரிக்கும் நேட்டோ
மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் தலைமையில் அணு ஆயுத பயிற்சியை நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா எல்லையில் லட்சக்கணக்கான போர் வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், போர் மூளும் சூழல் உருவாகும் என உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன.
உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இருநாடுகளுக்கு இடையே 2014 முதல் எல்லை பிரச்னை உள்ளது. தற்போது நாட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது.

படைகள்
இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது ரஷ்யா. பதற்றம் அதிகரித்ததால், உக்ரைனும் படையைக் குவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இரு நாட்டுப்படைகளும் எல்லையில் குறைந்த அளவு படைகளைத் திரும்பப்பெற்றது. இந்நிலையில், மீண்டும் இரு நாட்டுப் படைகளும் எல்லையில்
வீரர்களைக் குவித்தது.

உக்ரைன்
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களம் இறங்கியது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதனால் ஐரோப்பாவுக்கு பாதிப்பு என்று அமெரிக்கா தெரிவித்தது. இந்நிலையில் குறைந்த அளவிலான படைகளைத் திரும்பப் பெற்றது ரஷ்யா. ஒரு லட்சத்துக்கு அதிகமான படைகள் இன்னும் உக்ரைன் கிரிமியா பகுதியில் இருப்பதால், அமெரிக்கா ரஷ்யாவை எச்சரித்தது.

பயிற்சி
இந்நிலையில், ரஷ்யா தனது அணு ஆயுத பலத்தை காட்டும் வகையில் இன்று பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக ரஷ்யா கூறி உள்ளது. இந்த பயிற்சியில் அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிவிரைவு ஏவுகணைகள், நவீன போர் ஆயுதங்கள் ஈடுபடுத்தப்பட இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

புதின் தலைமை
இப்பயிற்சியை ரஷ்ய அதிபர் புதின் நேரில் பார்வையிட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்த 2014ல் உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய கிரிமியன் பகுதியிலும், கருங்கடலிலும் ரஷ்ய போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. போர் சூழலுக்கு மத்தியில் இதுபோன்ற அணு ஆயுத பயிற்சியை ரஷ்யா நடத்துவது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன.

கண்டனம்
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசுகையில், "அமெரிக்கா மற்றும் நமது நட்பு நாடுகள் அனைத்தும் நேட்டோ-வின் நாடுகளை ஒவ்வோர் அங்குலமாக அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கத் தயாராக உள்ளன. நாங்கள் உக்ரைனில் சண்டையிட, படைகளை அனுப்ப மாட்டோம். ஆனால் உக்ரேனிய மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்" எனக் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications