மலேசிய விமானத்தை சுட்டுத் தள்ளியது ரஷ்யா தான், ஆதாரம் இருக்கு: சொல்கிறது உக்ரைன் அரசு
கீவ்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17-ஐ ஏவுகணை வீசித் தாக்கியது ரஷ்யா தான் என்பதை நிரூபிக்க தயார் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் 298 பேர் பலியாகினர்.
ரஷ்ய விமானம் என்று நினைத்து உக்ரைன் தாக்கியதாகவும், உக்ரைன் விமானம் என்று நினைத்து ரஷ்ய ராணுவ ஆதரவுப்படை தீவிரவாதிகள் தாக்கியதாக உக்ரைனும் தெரிவித்து வருகிறது.

உக்ரைன்
மலேசிய விமானத்தை ரஷ்யா தான் ஏவுகணை வீசித் தாக்கியது என்பதை தங்களால் நிரூபிக்க முடியும் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ஆதாரங்கள்
விமானம் விழுந்த இடத்திற்கு மீட்பு குழுவினரை வரவிடாமல் தடுத்து, ஏவுகணையை விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட்ட கருவியை ரஷ்யாவுக்கு தீவிரவாதிகள் எடுத்துச் சென்றுவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

பக்
ரஷ்ய எல்லையில் உள்ள சாலைகளில் பக் ஏவுகணை சிஸ்டம்கள் 3 இருந்த புகைப்படங்களை உக்ரைன் பாதுகாப்பு துறை அதிகாரி விடலி நைடா வெளியிட்டுள்ளார்.

ஆதாரம்
இந்த தீவிரவாத தாக்குதலை ரஷ்ய ஃபெடரேஷன் திட்டமிட்டு நடத்தியதற்கான ஆதராங்கள் எங்களிடம் உள்ளது. தீவிரவாத நடவடிக்கையையும், அதில் தங்களின் நேரடி ஈடுபாட்டையும் மறைக்க ரஷ்யா முயற்சிக்கிறது என்று எங்களுக்கு தெரியும் என்று நைடா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications