ரஷ்யாவை வீழ்த்துவோம்.. வெற்றி எங்களுக்கே.. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அதிரடி
கிவ்: ‛‛அமைதியான உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு வீசுகிறது. ரஷ்யாவின் போரில் உக்ரைன் வெற்றி பெறும். உக்ரைனுக்கு பிற நாடுகள் உதவி செய்ய வேண்டும்'' என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வந்த நிலையில் போரை துவங்கியுள்ளது. ரஷ்ய அதிபர் விலாதிமர் புடின் உத்தரவில் அந்நாட்டு படைகள் உக்ரைன் மீது குண்டுவீசி தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளன. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் பதிவு
இந்நிலையில் தான் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது அனைத்து நாடுகளும் பொருளாதார தடைகள் விதித்து பாடம் கற்பிக்க வேண்டும். உக்ரைனுக்கு பிற நாடுகள் உதவி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒன்றிணைய வேண்டும்
அந்த பதிவில் ‛‛ரஷ்யா அதிபர் புடின் போர் நடவடிக்கையை முழுமையாக துவங்கி உள்ளார். அமைதியான உக்ரைன் நாட்டு நகரங்கள் தாக்குதலுக்கு உட்பட்டு வருகிறது. இது ஆக்கிரமிப்புக்கான போர். உக்ரைன் தன்னை தற்காத்து கொள்வதோடு, நிச்சயம் வெற்றி பெறும். ரஷ்ய அதிபர் புடினின் நடவடிக்கையை உலக நாடுகள் தடுக்க வேண்டும். இது ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம்'' என குறிப்பிட்டுள்ளார்.

உதவிகள் வேண்டும்
மேலும் ரஷ்யாவை கட்டுப்படுத்த பிற நாடுகள் தற்போது செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்ன என்பது குறித்து டிம்ட்ரோ குலேபா குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான பதிவில், முதலாவதாக ரஷ்யாவுக்கு பேரழிவு தரும் வகையில் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் எனவும், 2வதாக ரஷ்யாவை அனைத்து விஷயங்களிலும் தனிமைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் 3வது, 4வதாக உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்ய வேண்டும். 5வதாக மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சமடையும் மக்கள்
மேலும் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைன் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். உயிர் பிழைக்கும் நடவடிக்கையாக அவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தஞ்சமடைகின்றனர். மேலும் உக்ரைன் நாட்டில் உள்ள பிற நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு நேட்டோ அமைப்பு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் படைகள் பதிலடி கொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடக்கும் பட்சத்தில் இது 3வது உலக போராக மாறலாம் என அஞ்சப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications