Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யாவை வீழ்த்துவோம்.. வெற்றி எங்களுக்கே.. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அதிரடி

Subscribe to Oneindia Tamil

கிவ்: ‛‛அமைதியான உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு வீசுகிறது. ரஷ்யாவின் போரில் உக்ரைன் வெற்றி பெறும். உக்ரைனுக்கு பிற நாடுகள் உதவி செய்ய வேண்டும்'' என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Ukraine VS Russia | Ukraine Crisis | மூன்றாம் உலகப்போர் வருமா? | இந்தியா என்ன செய்யப்போகிறது?

    உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வந்த நிலையில் போரை துவங்கியுள்ளது. ரஷ்ய அதிபர் விலாதிமர் புடின் உத்தரவில் அந்நாட்டு படைகள் உக்ரைன் மீது குண்டுவீசி தாக்குதலை ஆரம்பித்துள்ளன.

    இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளன. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    டுவிட்டர் பதிவு

    டுவிட்டர் பதிவு

    இந்நிலையில் தான் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது அனைத்து நாடுகளும் பொருளாதார தடைகள் விதித்து பாடம் கற்பிக்க வேண்டும். உக்ரைனுக்கு பிற நாடுகள் உதவி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

     ஒன்றிணைய வேண்டும்

    ஒன்றிணைய வேண்டும்

    அந்த பதிவில் ‛‛ரஷ்யா அதிபர் புடின் போர் நடவடிக்கையை முழுமையாக துவங்கி உள்ளார். அமைதியான உக்ரைன் நாட்டு நகரங்கள் தாக்குதலுக்கு உட்பட்டு வருகிறது. இது ஆக்கிரமிப்புக்கான போர். உக்ரைன் தன்னை தற்காத்து கொள்வதோடு, நிச்சயம் வெற்றி பெறும். ரஷ்ய அதிபர் புடினின் நடவடிக்கையை உலக நாடுகள் தடுக்க வேண்டும். இது ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம்'' என குறிப்பிட்டுள்ளார்.

    உதவிகள் வேண்டும்

    உதவிகள் வேண்டும்

    மேலும் ரஷ்யாவை கட்டுப்படுத்த பிற நாடுகள் தற்போது செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்ன என்பது குறித்து டிம்ட்ரோ குலேபா குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான பதிவில், முதலாவதாக ரஷ்யாவுக்கு பேரழிவு தரும் வகையில் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் எனவும், 2வதாக ரஷ்யாவை அனைத்து விஷயங்களிலும் தனிமைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் 3வது, 4வதாக உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்ய வேண்டும். 5வதாக மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    தஞ்சமடையும் மக்கள்

    தஞ்சமடையும் மக்கள்

    மேலும் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைன் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். உயிர் பிழைக்கும் நடவடிக்கையாக அவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தஞ்சமடைகின்றனர். மேலும் உக்ரைன் நாட்டில் உள்ள பிற நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு நேட்டோ அமைப்பு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் படைகள் பதிலடி கொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடக்கும் பட்சத்தில் இது 3வது உலக போராக மாறலாம் என அஞ்சப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+