துபாயில் ஐ.நா. உலக சமாதான தூதரான தமிழருக்கு வரவேற்பு
துபாய்: துபாய்க்கு வருகை புரிந்த ஐ.நா.வின் உலக அமைதிக்கான சமாதான தூதரான தமிழகத்தைச் சேர்ந்த ரெவரன்ட். முனைவர் ஜே. ஜெயசிங்கிற்கு 14.01.2014 அன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் சமூக சேவகர் ஜெயந்தி மாலா சுரேஷ், ஏ. லியாக்கத் அலி, ஏ.முஹம்மது தாஹா, பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமீரகத் தமிழர்களின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பினை ஏற்றுக்கொண்ட முனைவர் ஜெ.ஜெயசிங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் 1983 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு ஊழியம் செய்யப் புறப்பட்டார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

2003 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக சமாதானத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். இதன் சார்பில் உலகில் ஏதேனும் நாடுகளுக்கிடையே பிரச்சனை ஏற்படும்போது அந்த இரு நாடுகளுக்கும் பயணித்து இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தனது 47 ஆண்டு கால ஆராய்ச்சியில் இறைவன் ஒருவனே, மனித குலம் ஒன்று தான் என்ற கருத்துக்கள் தான் உண்மையானவை எனக் குறிப்பிட்டார். ஐ. நா. சபையின் உலக சமாதான தூதுவராக செயல்பட்டு வரும் ஜெயசிங் இப்பணிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் மட்டுமல்ல. முதல் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications