கொரோனா- உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை.. தன்னிச்சையாக செயல்பட்டால் எப்படி?.. குட்டரேஸ் வேதனை
ஜெனீவா: கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது. அது போல் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4.80 லட்சமானது. இதுவரை 50 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.
58,013 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து 2ஆம் உலக போருக்கு பின் உலக நாடுகள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் என குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா
சர்வதேச நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அனைத்து நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகளை விட்டுவிட்டு கொரோனாவுக்கு எதிராக போராட வாருங்கள் என அழைப்பு விடுத்தார். சமூக விலகல், மாஸ்க் அணிதல், கைககளை சுத்தமாக கழுவுதல் ஆகியவற்றால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என ஐநா சபை வலியுறுத்தி வருகிறது.

உலக ஒருங்கிணைப்பு
இந்த நிலையில் ஐநா சபையின் பொதுச் செயலாளர் குட்டரெஸ் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் உலக நாடுகள் அனைவரும் தனித்து செல்வதன் மூலம் நிலைமை கையை மீறி செல்லும் நிலைக்கு சூழலை கொண்டு செல்கிறார்கள. எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சரி உலக ஒருங்கிணைப்பு முக்கியமானது.

கொரோனா
சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த கொரோனா ஐரோப்பியா நாடுகளுக்கும் வடஅமெரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா என பெரும்பாலான நாடுகளில் பரவியது. ஒன்றிணைந்து செயல்படுவது என்ற புரிதலை நாடுகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பரிசோதனை
கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவது மட்டுமின்றி நோய்க்கான சிகிச்சை, பரிசோதனை முறைகள், தடுப்பூசி உள்ளிட்டவை அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். அப்போதுதான் கொரோனாவை வீழ்த்த முடியும். கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள வேலையிழப்புகள், வன்முறை அதிகரித்தல், மனித உரிமைகள் மீறப்படுவது உள்ளிட்டவைகளுக்கு அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் ஒருங்கிணைப்பது நோயின் தாக்கத்தை குறைக்கும்.

விரக்தி
அது போல் சர்வதேச அளவில் ஒற்றுமை இல்லாததால் நான் வேதனையும் விரக்தியும் அடைகிறேன். தடுப்பூசி என கண்டுபிடித்தால் அது மக்களுக்கான தடுப்பூசியாக இருக்க வேண்டும். வணிக ரீதியில் பணக்காரர்களை உருவாக்குவது போன்று இருக்கக் கூடாது என குட்டரேஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications