ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை!
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக சீனா உட்பட 21 நாடுகள் உள்ளன. இந்தியாவோ நடுநிலை வகிக்கிறது.
2009-ம் ஆண்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் படுகொலை விவகாரம் ஐநா மனித உரிமைகள் சபையில் தொடர்ந்து எதிரொலித்து கொண்டிருக்கிறது. போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த தீர்மானங்களின் சாரம்சம்.

வெளியேறிய இலங்கை
இலங்கை அரசுகளோ இதுவரை ஒருதுரும்பையும் கிள்ளிப்போட்டதும் இல்லை. இதனிடையே ஐநா மனித உரிமைகள் சபையில் இருந்து கடந்த ஆண்டு இலங்கை வெளியேறியது.

ஐநா மனித உரிமைகள் ஆணையம்
தற்போது இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் சபையில் மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையை மிக கடுமையாக இந்த தீர்மானம் விமர்சித்துள்ளது.

தீர்மான ஆதரவு- எதிர்ப்பு
இந்த தீர்மானத்தை இங்கிலாந்து, நார்வே, கனடா உள்ளிட்ட 15 நாடுகள் ஆதரிக்கின்றன. அதாவது இலங்கைக்கு எதிராக உள்ளன. அதேநேரத்தில் சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, இந்த தீர்மானத்தை எதிர்க்கின்றன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகிக்கின்றன.

இந்தியாவின் நிலை
2012-ம் ஆண்டு மத்தியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்ததால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது. 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications