உத்தரபிரதேச சிறுமிகள் படுகொலை – ஐ.நா.சபை கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

உஷைத்: உத்தர பிரதேசத்தில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவத்திற்கு ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உஷைத் கிராமத்தைத் சேர்ந்த, 14, 15 வயதுள்ள இரு சிறுமிகள் கடந்த 27 ஆம் தேதி இரவு காணாமல் போயினர்.

United Nations organization condemnations the UP rape case…

இதுகுறித்த வழக்கை காட்ரா சதாத்கஞ்ச் காவல்துறை பதிவு செய்ய மறுத்தது. 28ஆம் தேதி காலை இரு சிறுமிகளின் உடல்களும் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன.

இச்சம்பவத்தால் வெகுண்டெழுந்த கிராம மக்கள் காவல்துறை யின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினர்.இதைத்தொடர்ந்து காவல்துறை யினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டனர். பிரேதப் பரிசோதனையில் இரு சிறுமிகளும் கும்பலால் பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது படுபயங்கரமான செயல் எனவும், கொடூர குற்றச் செயல் எனவும் ஐ.நா.வின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபனே துஜ்ஜாரிக் தெரிவித்துள்ளார்.

"ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+