மிகப்பெரிய பார்பிக்யூ: உருகுவே 'கின்னஸ் உலக சாதனை'
உருகுவேவில் உள்ள மினாஸ் என்ற சிறிய நகரம், உலகிலேயே மிகப்பெரிய பார்பிக்யூ நிகழ்வை நடத்தி, கறிகள் சமைத்து புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.
கிட்டத்தட்ட 200 சமையல் கலைஞர்கள் இணைந்து, 60 டன் மரத்தை பயன்படுத்தி, மிகப்பெரிய, நீண்ட பார்பிக்யூ கறி சமைத்தனர். இதில், 16.5 டன் கறி, 14 மணிநேரத்திற்கு சமைக்கப்பட்டது.
உருகுவே, வென்றிருந்த இந்த பட்டத்தை, 2011ஆம் ஆண்டு, அர்ஜென்டீனா முறையடித்து கைப்பற்றியிருந்தது. அதை மீண்டும் முறியடிக்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டது.
இந்த இருநாடுகளுக்குமிடையே, யார் அதிக மாட்டுக்கறியை உற்பத்தி செய்கிறார்கள் என்பதில் பெரிய போட்டி நிலவுகிறது.
உருகுவே நாடு, உலகளவில் மாட்டுக்கறி ஏற்றுமதியில் முக்கிய இடத்தில் உள்ளது.
இந்த உலக சாதனைக்காக பயன்படுத்தப்பட்ட மாட்டுக்கறிகள் போட்டிக்கு முன்பு, சமைக்கப்பட்ட பிறகு என இரண்டுமுறை எடைபார்க்கப்பட்டன.
புதிய கின்னஸ் உலக சாதனையைப்படைக்க, இந்த கறியின் எடை, 2008ஆம் ஆண்டு, அர்ஜென்டீனாவின் லா பாம்பா நகரில் நடந்த போட்டியில் இருந்த கறியின் எடையான 9.16 டன்களை விட அதிகமாக இருக்கவேண்டும்.
உருகுவே நடத்திய பார்பிக்யூ சாதனை முயற்சியில், கறியின் எடை, 10.36 டன்கள் இருந்ததை, நோட்டரி உறுதி செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த உருகுவே சமையல் கலைஞர் ஒருவர், இந்த நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை தொடர்பானது அல்ல. இது அர்ஜென்டீனாவை முறியடிப்பது தொடர்பானது என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்த கறியுடன் சாப்பிட, நான்கு ஆயிரம் கிலோ எடைகொண்ட ரஷ்யன் சாலட்டையும், கலைஞர்கள் தயார் செய்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள், இந்த சாதனை முயற்சியை காணவும், உணவை ருசிபார்க்கவும், அங்கு கூடியிருந்ததாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
சமைக்கப்பட்ட கறி, ஒவ்வொறு தட்டும், ஐந்து டாலர்களுக்கு மேல் விற்கப்பட்டது.
பிற செய்திகள்
- இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?
- செளதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரையரங்குகளுக்கு அனுமதி!
- அனுஷ்காவை மணந்தார் விராட் கோலி!
- நியூயார்க்கின் மான்ஹாட்டன் பேருந்து முனையத்தில் வெடிப்புச் சம்பவம்
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்















Click it and Unblock the Notifications