எங்கக்கிட்டயேவா.. தென் கொரியாவில் போர் விமானங்களை குவித்தது அமெரிக்கா! உச்சக்கட்ட பதற்றம்!
வடகொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தென் கொரியாவில் தனது போர் விமானங்களை குவித்துள்ளது.
பியாங்ஜியாங்: வடகொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தென் கொரியாவில் தனது போர் விமானங்களை குவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடகொரியா ஜாங்காங் என்னுமிடத்தில் இருந்து கடந்த 28ஆம் தேதி இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியுள்ளது. இந்த ஏவுகணை ஜப்பானின் சிறப்புப் பொருளாதார மண்டலம் அருகே கடலில் விழுந்ததாகத் தென்கொரியாவும் ஜப்பானும் தெரிவித்தன.
கொரிய நேரப்படி இரவு பதினொன்றே முக்கால் மணிக்கு இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாகத் தென்கொரிய அரசு தெரிவித்தது. ஐநாவின் தடையை மீறி இரண்டாவது முறையாக வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை
இந்நிலையில் வடகொரியாவின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பறந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 28 ஆம் தேதி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்த வடகொரியா இந்த ஏவுகணையால் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அழித்துவிட முடியும் எனவும் வடகொரியா மிரட்டல் விடுத்தது.

விமானங்களை அனுப்பிய அமெரிக்கா
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா தனது போர் விமானங்களை தென் கொரியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. தென் கொரியாவிற்கு வந்த அமெரிக்காவின் பி-1 போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பலமுறை பறந்து வட்டமடித்தன.

மிரட்டலுக்கு பதிலடி
தென்கொரியாவின் விமானப்படை தளத்திற்கு மேல் பறந்த அமெரிக்க போர் விமானங்களுக்கு பறந்த படியே எரிபொருள் நிரப்பும் காட்சிகளை அமெரிக்க விமானப்படை வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் போர் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தனது விமானங்களை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது.

தென்கொரியா, ஜப்பான்
அமெரிக்க போர் விமானங்களுடன் தென்கொரியா மற்றும் ஜப்பான் போர் விமானங்களும் இந்த பதில் நடவடிக்கையில் ஈடுபட்டன. வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மூலம் அமெரிக்காவைச் சீண்டி வருகிறது.

உச்சக்கட்ட போர் பதற்றம்
இந்நிலையில் அமெரிக்காவும் பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications